மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள் - மன்னார் அமுதன்

Photo by Ramona Kudure on Unsplash

மெல்லக் கதவுள் !
மிடுக்காய் ஒளிந்தாள்!
-----------------------------------!
கண்டேன் அவளைக்!
கடற்கரை அருகே!
நின்றேன் ஒரு கணம்!
நினைவுகள் இழந்து!
சென்றேன் அந்தச்!
செம்மொழி அருகில்!
வந்தனம் என்றேன் !
வாய்மொழி இல்லை!
கண்டும் காணாமல் !
நிற்காமல் செல்லுமிவள்!
நிலவின் மகளோ !
நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்!
தீண்டாமல் செல்கிறாளே!
நீரின் உறவோ!
தொடர்ந்தேன் பின்னால்!
தொழுதேன் கண்ணால்!
அமர்ந்தேன் அந்த!
அமிர்தம் அருகில்!
***!
தாயின் கையைத்!
தட்டி எழுந்தவள்!
தாமரைப் பூக்களாய்!
வெட்டி மலர்ந்தாள்!
“போதும் போதும்”!
போகலாம் என்ற!
அன்னையை முறைத்து!
அருகினில் வந்தாள்!
போறோம் நாங்க!
நீங்களும் போங்க!
இதழ்கள் பிரித்து!
இருவரி உதிர்த்து!
அரிவரிச் சிறுமியாய்!
மறைந்தவள் போனாள்!
!
***!
!
சிந்தையை விட்டுச் !
சிதற மறுக்கும்!
மங்கையைக் கண்டு!
மாதங்கள் இரண்டு!
மறுபடி அவளைக்!
காணும் நாள் வரை!
மனதினை வதைக்கும்!
கனவுகள் திரண்டு!
***!
தேய்பிறையோ, !
வளர்பிறையோ!
தெரியாத நிலவு அவள்!
அடைமழையோ!
இடி புயலோ!
அறியாத அல்லி அவள்!
***!
புன்னகையின் தேவதையாய்!
பூமியிலே பிறந்தவளே!
என்னபிழை நான் செய்தேன்!
ஏனென்னை வெறுக்கின்றாய்!
காணாமல் நானிருந்தால்!
கணமொன்றில் இறந்திடுவேன்!
நோய்கொண்டு போகுமுன்னே!
நானுன்னைக் காண வேண்டும்!
***!
என்!
பாசமுள்ள பூமகளே!
வாசலிலே கண்டவுடன்!
வாங்கப்பா என்காமல் !
மெல்லக் கதவுள் !
மிடுக்காய் ஒளிந்து கொண்டு!
அம்மா அம்மாவென!
அரற்றி அழுதவளே!
அச்சம் வேண்டாம்!
பிச்சைக்காரனோ!
பிள்ளை பிடிப்பவனோ!
அச்சம் அறியாத - இளம் !
ஆண்மகனோ நானில்லை!
அப்பா...!
நானுன் அப்பா!
சீதனச் சீரழிவால்!
சிதறிய நம் குடும்பம்!
சீதேவி உன்னாலே!
சீராக வரம் வேண்டும்!
வாசலிலே கண்டவுடன்!
வாங்க என்று சொல்லாமல்!
மெல்லக் கதவுள் !
மிடுக்காய் ஒளிந்து கொண்ட!
என்!
செல்ல மகளே -உன்னைச்!
சீராட்ட வரம் வேண்டும்
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.