அப்பாவின் கோபம் - ஜே.பிரோஸ்கான்

Photo by Jr Korpa on Unsplash

இறப்புக்கு வந்தவர்களில் சிலரை!
தன் கடைசி நாளில் அப்பா!
பார்த்திருக்கவில்லை.!
உசுரோடு இருக்கும் போதோ!
நோய்மையில் சுருண்டு பாய்!
படுக்கையாகியிருக்கும் போதோ!
வராத கூடப்பிறந்தவர்களும்,சொந்தங்களும்,!
நெடு தூரக்கிராமத்திலிருந்து வந்து!
கண்ணீர் வடிப்பதை அப்பா உயிர்த்திருந்தால்!
கண்டித்திருப்பார்.!
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட!
வழியில்லாத படி படுக்கையாகி!
இருக்கும் போதும்,!
தனக்கு நான்கு ஊர் கழித்து!
உறவுகளிருப்பதாக சொல்லவேயில்லை.!
அம்மாவும் அப்பாவின் உணர்வுக்கு!
கட்டுப்பட்டவள் தான்.!
மூச்சு கூட விடவில்லை அம்மாவும்,!
இது பற்றி.!
தலையில் அடித்தடித்து கதறும்!
என் அப்பம்மாவை பார்த்து!
கடைசியாய் பார்த்துக்குங்கே உங்க,!
பிள்ளையின் முகத்தையென்று சொல்லும் போது.!
அப்பம்மா தன் தலையை உயர்த்தி!
பரிதாபமாக என்னைப் பார்த்தப்போ?!
அப்பா என்னை கோபத்தோடு பார்த்ததை!
நான் கவணிக்கத் தவறவில்லை
ஜே.பிரோஸ்கான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.