ஆல மரத்துப் பேயும் அம்மம்மாவும்! - ஜே.பிரோஸ்கான்

Photo by Austin Chan on Unsplash

ஊர் வடக்கு எல்லைப்பக்கமாக!
ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மரத்தில்!
பேய்கள் காய்த்திருப்தாக அம்மம்மா!
சொல்லும் கதையில் பயமிருக்கும்.!
ஆலை மரத்தைத் தாண்டிப் போய்தான்!
தாவணிக் குமரிகள் குடி நீர்!
இரைத்து வர வேண்டுமென்பதாகவும்,!
எங்க இன்ஜினியர் மாமா கணிதப்பாடம்!
கற்க கஷ்டப்பட்டு போனதெல்லாம்!
அந்த ஆல மரத்தை தாண்டித் தானாம்.!
ராத்திரி வௌவால்களின்!
சப்த மொழிகளை பேய்கள்!
ரகசியமாய் அறிந்து கொண்டதாகவும்,!
அம்மம்மா சொல்லும் கதை பயங்கரம்.!
நிசி நாய்களின் ஊளையில்!
வௌவால்களின் சப்தம் அடங்கிப்போவது பற்றி!
அம்மம்மாவிடம் கேட்டால்?!
பேய்களின் திருவிழா நடந்தேறுவதாக!
அம்மம்மா மொழிவா.!
இத்தனை கதையையும் அம்மம்மா!
சொல்லக்காரணம்.!
அந்த ஆல மரத்துக்கிளை விழுதில்!
ஒரு தடவையேனும் ஊஞ்சலாட வேண்டுமென்று,!
பகல் உணவின் போது,!
அம்மாவிடம் கேட்டதையும், குமரிப் பெண்ணாய்!
நடக்க கத்துக்கோயென்று அம்மா கண்டித்ததையும்,!
அம்மம்மா செவியுற்றுருக்க கூடும்.!
ஜே.பிரோஸ்கான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.