யாரறிவார் ? - சத்தி சக்திதாசன்

Photo by joel protasio on Unsplash

தண்ணீரில் மீன்!
உன்!
தாகத்தை யாரறிவார் ?!
நீலவானத்துள் உறைந்த!
நீலம் நீ - உன்!
நிறத்தை யாரறிவார் ?!
தென்றலின் குளிர்மை நீ!
உன் கூதலுக்கு போர்வை!
யார் தருவார் ?!
அருவத்தின் நிழல் நீ!
உன்!
உருவத்தை யாரறிவார் ?!
இரவின் இருட்டு நீ!
உன்!
வெளிச்சத்தை யாரறிவார் ?!
கதிரவனின் வெப்பம் நீ!
உன்!
தகிப்பை அறிந்தவர் யார் ?!
காதலென்னும் ஆலயத்தில் நீ!
கற்பூரம்!
கண்டவர் யார் அதன் வாசத்தை ?!
அன்புடன்!
சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.