அன்புநிறை நெஞ்சங்களே - சத்தி சக்திதாசன்

Photo by Tengyart on Unsplash

தீபத் திருவொளியில் அகிலத்தில்!
தீமைகள் கருகிப் போய்விடவும்!
தீயவைகளின் தேவைகள் இங்கே!
தேவையற்று அருகிப் போய்விடவும்!
நேற்றைகளில் கடந்தவைகள் யாவும்!
இன்றைகளின் நிகழ்வுகள் யாவும்!
நாளைகளின் அனுபவமாய்க் கொண்டு!
நிச்சயம் புத்தொளி கண்டு வாழ்ந்திட!
நேசத்தில் விளைந்த ஞானத்தில்!
தேசத்தின் எல்லைகளைக் கடந்து!
வாசமிக்க தமிழ் மலர்களாக நாம்!
பாசமிக்க வாழ்வில் இணைந்து கொண்டு!
தீபத்தின் திருநாளாம் புவியில் காணும்!
தீபாவளித் திருநாளில் அனைத்து!
வேற்ருமைகளையும் கடந்து நாமிங்கு!
வேண்டுவோம் ஓரினமாய் ஓர் மதமாய்!
வெற்றிகொள் மொழியெங்கள் தமிழ்மொழி!
வாஞ்சையுடன் தமிழன்னை பாதம் பணிந்து!
அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும்!
அன்புடன் கூடிய வாழ்த்துக்கள்!
வாழிய ! வாழிய ! அனைவரும்!
அகிலம் சிறக்க பல்லாண்டு வாழ்க!
அன்புடன்!
சக்தி சக்திதாசன் குடும்பம்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.