மெதுவாய் வருகுது புதிதாய் வருடம் - சத்தி சக்திதாசன்

Photo by Tengyart on Unsplash

சக்தி சக்திதாசன்!
!
கலைந்தோடும் கனவுகளாய்!
காற்றோடு மறையும் புகையாய்!
காரிருளில் புதையும் பகலாய்!
கடக்குது ஒரு வருடம் இங்கே!
கால்கடுக்க ஓடி உழைத்து!
காலமெனும் கடலில் நீந்தி!
கன்னத்தில் கண்ணீர் கோடுகளோடு!
கழித்து விட்ட வருடம் கழியுது!
நிறுத்த முடியா காலக்கடியாரம்!
நிறுக்க முடியா நிகழ்வுகளோடு!
நிறைக்கும் அனைவரின் நெஞ்சங்களை!
நிஜமாய் மறையுது வருடமொன்று!
சிலரின் வாழ்வில் கண்ணீரும்!
சிலரின் வாழ்வில் பன்னீரும்!
சிலரின் வாழ்வில் செந்நீரும்!
விளக்கமுடியா விளைவுகளே!
நீயென்ன சொன்ன போதும்!
நானென்ன செய்த போதும்!
யாரென்ன முயற்சித்தாலும்!
உலகம் உருள்வது உருள்வதுதான்!
முதிர்ந்த உள்ளங்கள் உணர்ந்ததை!
முளை விட்ட உள்ளங்கள் அறிந்திடவே!
அனைவரும் ஒன்றாய் இணைந்து இங்கே!
அறிவைப் பகிர்வோம் அவனிதனிலே!
உலகம் மிகவும் சிறியதுதான்!
உனக்கும் அங்கே உழைக்கும் தேவை!
உயர்ந்து நீயும் உலகை உயர்த்து!
உயரும் நாளைய ஏழையின் வாழ்க்கை!
மெதுவாய் வருகுது புதிதாய் வருடம்!
மேகக் கூட்டம் கலையுது வானில்!
நாளைய உலகம் வெளிக்குது!
நம்பி நாமும் நுழைவோம் அதனுள்!
அன்புடன்!
சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.