துரிகையின் காதலில்!
கவிபாடும் வண்ணங்கள்!
மின்னலாய் மின்னும்!
குழந்தையின் விழிகள்!
கவிதையை தேடும்!
வரிகளின் நிமிடங்கள்!
கோபத்திலும் அழகான!
அம்மாவின் கண்கள்!
வானத்து ஓவியனின்!
வானவில்!
கண்களுக்கும் சிந்தைக்கும்!
எல்லாமே அழகுதான்..!
நிமிடத்தில் மாறும் இயற்கை!
மனிதர்கள்போல..!
-- றஞ்சினி
றஞ்சினி