மாறாதவன் - செண்பக ஜெகதீசன்

Photo by FLY:D on Unsplash

எந்த விதைக்கும் பிடிப்பதில்லை!
பிழிந்து!
எண்ணெய் எடுக்கப்படுவது,!
எண்ணமுண்டு எல்லா விதைக்கும்-!
மண்ணில் விழுந்து!
மரமாகவேண்டும் முளைத்து,!
மகசூல் கொடுக்கவேண்டும் கிளைத்து,!
மக்களுக்கு உதவவேண்டும் தளைத்து…!!
மாறுதலாய் இருக்குதே!
மனிதனின் எண்ணம் மட்டும்-!
விதையை நசுக்கி!
எண்ணெய் எடுக்கிறான்,!
மரத்தை வெட்டி!
கரியாக்குகிறான்..!
மாறவில்லையே மனிதன்,!
மாறியபோதும் காலம்…!!
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.