நமக்கான நாட்கள்.... - செ.இராமதனவந்தினி

Photo by engin akyurt on Unsplash

சில நாட்கள்
நமக்கே நமக்கானவை
சிறிதும் குற்ற உணர்வு
இல்லாமல்
பிள்ளைகள் எழுந்தாலும்
நம் தூக்கத்தை நீட்டிக் கொண்டு
சூரியனை தாமதாக
வர சொல்லும் நாட்கள்.....
அடுக்களையில் பாத்திரங்கள்
நிரம்பி வழிந்தாலும்
பிடித்த சினிமாவை ரசித்து
நம்மை நாமே நிரப்பிக் கொள்ளும் நாட்கள்...
வீட்டின் மூலையில்
அடைந்திருக்கும் ஒட்டடையை
நீக்கி வீட்டை பரிசுத்தம் ஆக்கும் முன்
நம்முள் வெகுநாளாய்
மறைந்து கிடக்கும்
சின்னஞ்சிறு ஆசைகளை
தூசி தட்டும் நாட்கள்....
சிறந்த அம்மாவுக்கான
விருதை கொடுக்கும் முன்
உலகம் கேட்க வேண்டிய
ஒரு வினா
யாரிடம் விருதை கொடுப்பது?
வெற்றிடத்திடமா அல்லது அவளிடமா??
வெற்றிடம் அவளாக மாறுவது
அந்த நாட்கள் தான்‌.......
செ.இராமதனவந்தினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.