பிறர்தர வாரா! - ஆ.மணவழகன்

Photo by engin akyurt on Unsplash

ஒப்புசாண் மலை மீது!
பீடியைப் பற்றவைத்துக் காட்டினான்!
கோனான் சிவக்குமார் !
இரத்தினம் கிணற்றில் !
புறா பிடிக்கும் அவசரத்தில்!
புகையிலையின் மகத்துவம்(!?) சுட்டினான்!
பால்ய நண்பன் பாண்டியன் !
நாத்தம் பாக்காம குடிச்சிடு!
ஒத்தை மரத்துக் கள் உடம்புக்கு நல்லது!
எடுத்து வைத்தார்கள்!
சிறிய கோப்பையில் அப்பாவும்!
பெரிய சொம்பில் மாமாவும் !
பீர் மட்டுந்தான் நல்லதாம்!
காட்டுக்கோட்டை கல்லூரிக் காலத்தில்!
வாங்கிவந்தார்கள் !
சேட்டும் குமரேசனும் ராஜேசும் !
தேசியக் கல்லூரியில் !
வில்ஸ் வெண்சுருட்டை!
விரலிடுக்கில் வைக்கும்!
லாவகம் சொன்னான் மாப்ள காளிமுத்து !
கஞ்சா என்னவெல்லாம் செய்யும்!
வகுப்பெடுத்தான்!
அகால மரணமடைந்த !
ஆருயிர் நண்பன் பாக்கியநாதன் !
இதப் பழிக்கக்கூடாது சார்!
குழந்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாது!
இராணுவ ரம்மை சோடாவில் கலந்து கொடுத்தார்!
பசுமைக் கவிஞர் !
எதா இருந்தாலும் இதுக்கு உட்டதுதான்!
சாமிக்கு வாங்கி வைத்த சாராயத்தை !
நாக்கில் வைத்துப் பார்க்கச் சொன்னான்!
தையல் கடை செல்வம் !
முழு பான்பராக்கையும்!
ஒரே வாயில் போட முடியுமா?!
பந்தயம் கட்டித் தோற்றான்!
திருச்சி நண்பன் சங்கர் !
எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு!
எதிலேயும் ஒரு ---ம் இல்லை!
பழகியாச்சு விடமாட்டேங்குது!
பொய்சொல்லாதே !
உன் மனைவி விதவையாவது பற்றி !
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி!
எந்த அரசுக்கும்!
இங்குக் கவலையில்லை
ஆ.மணவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.