தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இன்னமும் உறங்கியிருக்கவில்லை

ரவி (சுவிஸ்)
இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று!
எனது குடிசையின்மீது இடறுகிறது.!
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து!
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர் !
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்!
என்னை கடத்திவைத்திருந்தன.!
கடந்துபோன காலங்களைப் போலன்றி,!
காற்றையும் கிடுகையும் தவிர!
என் மனம் வேறெதையும் வரைந்து கொள்ளவில்லை.!
பயமற்று இருந்தேன்.!
சமயத்தில் அதை ரசிக்கவும் செய்தேன்.!
தோகையாய் விரியும் கடற்காற்றின் இரைச்சல்!
காலம் என்னை கடைசியாக விட்டுச் சென்றிருந்த இடத்திலிருந்து!
தரையிறக்கிவிட,!
உடலுரசிய குளிர்காற்று என்னை நீவிவிட்டிருந்தது.!
மீன்கள் பேசிக்கொள்வது கூட கேட்கிறது.!
அரிக்கன்லாம்பின் வெளிச்சத்தை விடவும்!
கிடுகு ஓட்டை செதுக்கி அனுப்பிக்கொண்டிருந்த நிலாத்துண்டு!
சிறு உலகமாய் எனை வந்தடையவும்!
அதை உள்ளங்கையில் இருத்தி வைத்து !
அழகு பார்ப்பதுமாய், நான்!
வியாபித்திருந்த பொழுதில்!
கனவு ஒரு சிற்பமாய் வடிந்துகொண்டிருந்தது.!
நான் இன்னமும் உறங்கியிருக்கவில்லை

பழைய கண்ணீரின் உப்புக்கறை

அல் அமீனுல் தஸ்னீன்
உணர்ச்சியின் உளி கொண்ட!
பைத்திய சிற்பிகள் வெடித்தழும்!
சிதைவுகளின் ஓங்கார இரவில் !
குரூர அன்பின் குருதி மழை!
வாழ்வியல் கத்தியின் கைப்பிடியில் !
பழைய கண்ணீரின் உப்புக்கறை!
இரக்கமற்ற மவுனத்தீயிலிட்டே!
எரித்த இதயமெங்கும் ஊமைக்காயம்!
இனி!
வலியின் கதை மீட்ட!
விலா எலும்பே சாணைக்கல்!
நில்லுங்கள்!
தீட்டிய மனநோயை !
கூர் பார்த்து வருகிறேன்

துடிக்கிறது இரட்டைக்கிளவி

அல் அமீனுல் தஸ்னீன்
பேச்சின் எச்சில் தெறித்த காலத்தின் மீது !
நடைபிண வாழ் தவமிருந்தவனை !
மௌன மரணம் முத்தமிடுகிறது!
உருவகம்!
படிமம்!
எதுகை மோனை!
குறியீடு!
எதற்குள்ளும் அடங்கா !
உயிர்ப் பிரிகையில்!
துடிக்கிறது இரட்டைக்கிளவி!
அவதானியுங்கள்!
அங்கொருத்தி!
மொழியல்லா பெயர்த்தெழுதலில்!
அழுதுக்கொண்டிருக்கும் காதலை !
இதயம் கிழித்து காட்டுகிறாள்!
சிவக்கிறது!
பேரண்ட பெருவெளி!

முடிவுறாத கவிதையின் எதிர்காலம்

அல் அமீனுல் தஸ்னீன்
நிசப்தத்தை மொழிபெயர்க்கும் ஆழியலையினூடே!
சுழற்றி வீசப்பட்ட நிராகரிப்பின் நிமிடங்கள்!
நிர்வாணியாய் கரையொதுங்கி கிடக்க !
நிர்மூலத்தின் மீதூர்கிறது நினைவின் நண்டு!
இறந்தகாலத்தை துப்பும் உப்புக் காற்றில்!
நிர்க்கதியான வாழ்வின் அழுகல் வாடையை!
வட்டமிடுகிறது நிகழ்காலப் பசியின் கழுகு!
அதோ!
கடலுக்குள் விழுந்து !
தற்கொலை செய்யக் காத்திருக்கும்!
ஆதவனில் எரிகிறது !
முடிவுறாத கவிதையின் எதிர்காலம்!

பனிக் கண்கள்

அல் அமீனுல் தஸ்னீன்
எப்போதும் சொல்லி விட்டு வருபவள் !
முதல் முறையாய் அறிவிப்பேதுமின்றி !
பேரீச்சைபழங்களோடும் *ஸம் ஸம்* நீரோடும் !
வந்திருக்கிறாள் நானில்லாத போது. !
எப்போதும் முத்தமிடுபவள் !
என்ன செய்திருப்பாளென தேடுகிறேன்!
யாருக்கும் தெரியாமல்.!
குழந்தைகளின் கன்னத்தில் !
எனதறையின் ஒவ்வொரு மூலையில் !
திறந்தே கிடக்கும் அலமாரிகளில் !
வீட்டின் முன்னிற்கும் யூகலிப்டஸ் இலைகளில் !
இருசக்கர வாகன கைப்பிடியில் !
கடந்த ரம்சானில் வாங்கித் தந்த குர்தாவில் !
எங்குமில்லை தடயங்கள்.!
ஈத்தப்பழத்தோடு உரையாடிக் கொண்டே!
பழைய கவிதை நூலை புரட்டினேன். !
சோக கவிதையின் கடைசிப்பத்தியில்!
முத்தங்களை முட்டையிட்டிருக்கிறாள். !
இந்த கண்ணீர்த்துளிகள் படும் முன் !
சடாரென மூடுகிறேன்!
அடைகாத்தல் ஒரு கடினப்பணியே

கூடு விட்டு கூடு பாயும்

அல் அமீனுல் தஸ்னீன்
உச்சிமயிர் பிடுங்கியெறிந்த !
ஐவிரல் பதினான்கு மடிப்புகளுள் !
மூச்சடங்கு முன் துடித்த !
பாவங்களின் ஒப்பாரி. !
தற்கொலை கடிதமெழுதியவன்!
அமர்ந்த நாற்காலியில்!
தூக்கு மாட்டியவளின் கால்தடம். !
அரூபிகளின் அருவாள்கள் !
துருவேறி துறவு பூண்டதால்!
நாடிவர்மத்தில் துளைத்து !
கருணைக் கொலை. !
கவிதைகள் !
இனி!
கூடுவிட்டு கூடுபாயும்.!

நினைவு கூறல்

ரோஷான் ஏ.ஜிப்ரி
வாசற்படி,தின்னை,என் அன்னைமடி!
எப்பொழுதும் நான்!
ஞாபகங்களால் தவழ்ந்து விளையாடும்!
ஞானமடங்கள்!
பூரணமான எனது!
புனிதஷ்த்தலங்கள்!
வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறபோது!
தென்படும் என் திசைகள்!
தன் துணையை பயணமொன்றுக்கு!
கையசைத்து வழியனுப்ப மனமின்றி தவிக்கும்!
காதலியைப்போல் நானும்!
மயிலிறகால் வருடும்!
மழலை பருவத்தை !
நிகழ்காலத்தில் நினைவுகளில் கூட!
மீட்டிப்பார்க்கநேரமின்றி!
மின் விசிறியாய் சுழல்கிறேன்!
காலம் என்னை!
தன் அடுப்பன் கரையின்!
அம்மிக்கல் போலவே ஆக்கிவிட்டது

பழையபடி மரங்கள் பூக்கும்

ரோஷான் ஏ.ஜிப்ரி
பெரும் நெருப்பின் சுவாலை தணிந்து !
பனி நடக்கும் ஊரில் !
பஞ்சுமெத்தை விரித்து !
புற்கள் வரவேற்கும் கால்களை. !
கன்றிய இதயங்கள் இளகி !
முகம் பார்க்கும் மலர்களில். !
கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும் !
புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி !
உயிர்கள் கழித்து விளையாடும். !
நிறைந்த குளங்களிலிருந்து !
குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறுதடவும். !
நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி !
நினைவில் நின்று சிரிப்பாள், !
மனைவியின் உருவில் பேரப்பிள்ளைகளுடன். !
வடக்கின் குட்டானை !
கிழக்கின் நாருசிக்க !
ஒடியல் காயும் வாசலெங்கும். !
பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் காய்க்கும் !
பரீட்சய முகங்களுடன் புதிது,புதிதாய் !
பிரிவின் இளப்பில் !
உறைந்து உட்கார்ந்த மனங்கள் !
மீண்டெளும் விட்ட இடத்திலிருந்து தொடங்க !
போகும் வழியில் !
தலை தெறித்து உயிர் மரித்து முண்டமாய் நிற்கும் !
பனையின் அடியில் !
புனை முருங்கை விதைகளை !
புதைத்து விடுவோம் !
பழையபடி மரங்கள் பூக்க.!

மாற்றம்!

ம அருள் ராஜ்
முன்பு என் கையெழுத்து கிறுக்கல்!
இப்போதோ ஓவியம்!
முன்பு பேச தயங்கியவன்!
இப்போதோ கவிதை சொல்கிறேன்!
முன்பு நகைசுவைக்கு கோபபட்டவன்!
இப்போதோ திட்டினாலும் சிரிக்கிறேன்!
முன்பு பூக்களை கசகியவன்!
இப்போதோ முட்களையும் முத்தமிடுகிறேன்!
நான் என் மனதிடம் கேட்டேன்!
ஏன் இந்த மாற்றம்!
என் மனம் சொன்னது!
நீ காதலித்துக்கொண்டு இருக்கிறாய்

பூக்கட்டும் புதிய புன்னகை!

சின்னு (சிவப்பிரகாசம்)
பூக்கட்டும் புதிய புன்னகை!
எரிந்து அழியட்டும் பூ விழங்குகள்!
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்!
உணரட்டும் புதிய உலகினை!
கதவுகள் இங்கெதற்கு!
கயவர்கள் அழிந்தபின்னர்!
கடமைகள் இங்கெதற்கு!
உணர்வுகள் உணர்ந்த பின்னர்!
இருட்டினில் கோப்பெதர்க்கு!
இந்தியர் விழித்துவிட!
பகட்டினில் வாழ்வெதற்கு!
பட்டினிச் சாவிருக்க!
பகற்பொழுது தேவையில்லை!
பகலவன் உலா வர!
வழித் துணை தேவையில்லை!
மகேசன் பவனி வர!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூவுலகு மீட்சி பெற!
உதிக்கட்டும் புதிய விதிமுறை!
அரசியலும் தூய்மை பெற!
இருட்டினில் சட்ட இயற்றலோ!
வெளிச்சம் கொண்டாருங்கள்!
குறைகள் நிறைய இருக்கலாம்!
வெளிச்சத்தில் செயல்படுங்கள்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புவியாளும் மன்னர்கள் மத்தியில்!
தேர்தலுக்கு வாக்களித்தால்!
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்!
மடியட்டும் பழைய விதிமுறை!
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை!
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை!
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்!
பட்டினிச் சாவிருக்க!
பகட்டான வாழ்வெதற்கு!
பகலவன் வந்தபின்னும்!
இருட்டறையில் கோப்பெதர்க்கு