பனிக் கண்கள் - அல் அமீனுல் தஸ்னீன்

Photo by Waldemar Brandt on Unsplash

எப்போதும் சொல்லி விட்டு வருபவள் !
முதல் முறையாய் அறிவிப்பேதுமின்றி !
பேரீச்சைபழங்களோடும் *ஸம் ஸம்* நீரோடும் !
வந்திருக்கிறாள் நானில்லாத போது. !
எப்போதும் முத்தமிடுபவள் !
என்ன செய்திருப்பாளென தேடுகிறேன்!
யாருக்கும் தெரியாமல்.!
குழந்தைகளின் கன்னத்தில் !
எனதறையின் ஒவ்வொரு மூலையில் !
திறந்தே கிடக்கும் அலமாரிகளில் !
வீட்டின் முன்னிற்கும் யூகலிப்டஸ் இலைகளில் !
இருசக்கர வாகன கைப்பிடியில் !
கடந்த ரம்சானில் வாங்கித் தந்த குர்தாவில் !
எங்குமில்லை தடயங்கள்.!
ஈத்தப்பழத்தோடு உரையாடிக் கொண்டே!
பழைய கவிதை நூலை புரட்டினேன். !
சோக கவிதையின் கடைசிப்பத்தியில்!
முத்தங்களை முட்டையிட்டிருக்கிறாள். !
இந்த கண்ணீர்த்துளிகள் படும் முன் !
சடாரென மூடுகிறேன்!
அடைகாத்தல் ஒரு கடினப்பணியே
அல் அமீனுல் தஸ்னீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.