தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அழிந்தது நீங்களல்ல அம்மா

கனிகை
வெண்முகில்கள் தரையிறங்கி!
செஞ்சோலையில் உலவின!
சின்னக்கரம் பற்றிச் சிரித்தன!
அன்புமொழி பேசி அரவணைத்தன!
அகலக்கண் விரித்து அவலமுணர்ந்தன!
இராமனுக்குதவிடும் அணிற்குஞ்சுகளாகின!
இன்று!
குண்டுக்கிரையாகின!
எண்ண எண்ணத் துடிக்குது மனசு!
எப்படியாயிற்று?!
உணர்வுகள் உறைந்து!
மனசுகள் சிவந்து கிடக்கின்றோம்!
மிலேச்ச மிருகக்குதறல்!
எதிர்கொள்ளப் புறப்பட்ட!
விளக்கேந்திய பெருமாட்டிகள் நீங்கள்!
அதிகாலையில்!
பேய்க்கூத்து உங்களில் அரங்கேறின!
எத்தனை உறவுகளின் !
சொத்துக்கள் நீங்கள்!
பேச்சடங்கி மூச்சடங்கி!
அழிந்தது நீங்களல்ல அம்ம!!
பெண்ணினம் அழிந்தது!
தமிழினம் அழிந்தது!
மானிடம் அழிந்தது!
மகிழ்ச்சி அழிந்தது!
அவன் கௌரவம் அழிந்தது!
தலை கவிழ்ந்து நிற்கின்றோம்!
தோற்றோம் என்றல்ல!
உம் ஆத்மசாந்திக்காய்!
!
--கனிகை

தேடும் என் தோழா

நடராஜா முரளிதரன், கனடா
சூரியப் பந்தத்தைக்!
கைகளால் பொத்தி!
அணைத்து விட்டு!
சந்திரனுக்கு ஒளியைப்!
பாய்ச்சி விடும்!
கைங்கரியத்தில்!
ஆழ்ந்து போயிருக்கும்!
என் தோழா !
நீ புனைவுக்காரன்!
சூனியமான சந்திரனைப்!
பிரவாகம் கொள்ள!
வைத்தது!
உனது கவிதைகள்தான்!
என்று கூறுவாய் !
பாய்ந்து வந்த!
கோடானுகோடி!
கதிர் வெள்ளத்தின்!
நதிமூலத்தை!
அங்கீகரிக்க மறுத்த!
கற்பனாவாதி நீ !
சாவுக் களங்களில்!
கொள்ளிக் குடங்கள்!
துளையுண்டு!
தண்ணீர் கொட்டும்!
வேளைகள்!
வாய்க்கரிசி நிறைந்து!
வழியும் கணங்கள்!
நட்சத்திரங்கள்!
எரிந்து வீழும்!
பொழுதுகள்!
எனது கனவுகளைக்!
குலைத்து விடுகின்றன !
எனவேதான்!
நித்தியத்தைத்!
தேடியலைய!
என் ஆன்மா!
மறுத்து விடுகின்றது !
ஆழ்ந்து மோனித்து!
கடைந்தெடுத்து!
உன்னையும் காணாது!
என்னையும் கண்டடையாது!
இறுமாப்பில் பெருமிதம்!
கொள்ளும் என் தோழா!
யுகங்களாய்!
தொடரும் தேடல்கள்!
முற்றுப்புள்ளியைத் தேடி!
முடிவிலி வரை!
பயணம் புரிகின்றன

மைன் நதியோடு

றஞ்சினி
மங்கிய மின் ஒளியில் !
நனைந்து கொண்டிருக்கும் !
மைன் நதியில் !
உறங்கிக் கொண்டிருக்கும் !
நகரத்தை !
படம் பிடிக்கும்போது !
எங்கிருந்தோ வந்து !
தழுவிய பனிக்காற்று!
நதியுடன் போராடி!
என் நினைவுகளை !
மீட்டுச்செல்கிறது!
கலங்கிய நதியில்!
அதிர்கிறது நகரம் !
கலைந்துபோகிறது!
புகைப்படக்கனவும்.!
!
-றஞ்சினி

8$ (எட்டு டாலர்..)

பனசை நடராஜன், சிங்கப்பூர்
8$!
!
ஞாயிறு தவிர ஆறு நாட்களும்!
சட்டைப்பை 'படி தாண்டாமல்'!
கட்டுப்பாடாய் இருக்கிறது!
எட்டு டாலர்..!
இரண்டு மணி நேரம்,!
மூன்று மணி நேரம்!
வெளிநாட்டுக்குப் பேசலாம்..!
போதைத் தூண்டில்களோடு!
போன்கார்டுகள் பாதையெங்கும்..!
உறவுகளோடு சண்டையிட்டு,!
சமாதானமும் செய்ய!
இவ்வளவு நேரம் போதுமென்று!
எட்டிப் பார்க்கிறது சபலத்தோடு...!
பத்து நிமிடம் பேசி வைத்தால்!
பதினெட்டு நிமிடம் குறையும்!
மாயாஜாலக் கார்டுகளென்று!
பாவம் அதற்குத் தெரிவதில்லை..!
கலர் டிவி, கடிகாரம், இன்னும் பல!
அதிர்ஷ்டக் குலுக்கலில் இலவசமென்று!
அடுத்து வீசும் கவர்ச்சி வலையில்!
தடுக்கி விழுகிறது!
அரைநாள் கூலியான!
கப்பல் பட்டறை,!
கட்டுமானத் தொழிலாளர்களின்!
எட்டு டாலர்கள்...!!!!
பனசை நடராஜன், சிங்கப்பூர்

சொல்லடி அரசி யாரென்று.. மழை அரசி

வெளிவாசல்பாலன்
1.சொல்லடி அரசி யாரென்று!
!
மழைப்பொழுது நீ!
பனிவிழும் காலை ஒளி நீ!
காற்றிலாடித் துடிக்கின்ற கொடி நீ!
வர்ணங்கள் நீ!
வானவில்லின் கோலம் நீ!
சிறகடிக்கும் வண்ணத்துப் புச்சி நீ!
தீம் தரிகிட தித்தோம் தித்தோம்!
தா தெய் தரிகிட தித்தோம் நீ!
ஆடுகின்ற ஊஞ்சல் நீ!
நதி நீ!
யதி நீ!
இளவேனிலில் துளிர்க்கின்ற வசந்தம் நீ!
மலர்களில் நிறைந்திருக்கும் வாசனை நீ!
சரிகமபதநிச!
நிசதபமகரிச நீ!
வானம் நீ!
குயிலின் கானம் நீ!
சாகசங்கள் நீ!
சுவை ஊறித் ததும்பும் கனி நீ!
பரவசம் நீ!
என்றபோதும்!
சொல்லடி அரசி நீ யாரென்று!
உன் சுடர் மிகு ஒளிச் சொற்களால்!
!
2.மழை அரசி!
!
ஆடலி ஆடலி என்றேன்!
கோபுரத்தில் ஒலித்த குரல்!
திசைகளில் பெயர்ந்து காற்றாயிற்று.!
வானத்தில் மிஞ்சிய கிளையில்!
நடனமிடும் சிட்டைக் காணுந்தோறும்!
கண்கள் பனிக்கிறது ,!
நீ வருகிறாய் நினைவாய்.!
ஆடலி என்றேன்!
புக்கள் மலர்ந்தன!
நிறங்களாய் ஆனதிவ் வுலகம்!
நெய்த கனவில்!
நீ கரையும் ஓவியமாய் ...!
ஆடலி ஆடலி என்றழைக்குமென் குரல்!
தாகம் பெயர்க்கும் கோடையாயிற்றா ?!
ஆடலி ஆடலி!
நீ மழையல்லவா!
நடனமிடும் மழையல்லவா!
ஆயினுமேனிந்தக் கோடை இன்னும் ?

செல்லரிக்கச் செய்வோம்

லலிதாசுந்தர்
அவசர யுகத்தில் அன்புகூட!
தவணைமுறையில் பரிமாறப்படுகிறது!
கணவன்-மனைவி வசிப்பது ஓரேவீட்டில்!
இருவரும் சந்தித்து வாரம் கடந்திருக்கும்!
குறுஞ்செய்தி வழியாக ஊஞ்சலாடிக்!
கொண்டிருக்கிறது - அன்பு!
தொலைத்தொடர்பு கோபுரங்களின்!
உச்சியில்!
திருமண அழைப்பிதழ்!
கடன்பற்று அட்டை அல்ல!
நினைத்ததும் வங்கிபெயரை !
மாற்றிகொள்ள!
மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க!
உற்றார்களின் நடுவில் நிச்சயிக்கப்படும்!
பந்தம்!
மரக்கூண்டுகளின் நடுவே!
சுத்தியல் ஓசை முழங்க அறுக்கப்படுகிறது!
புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும்!
மனிதப்பண்புகள்!
மனிதர்களாக பிறந்தோம்!
மனிதர்களாக வாழப்பழகுவோம்!
விவாகரத்து வழக்குகளை!
செல்லரிக்கச் செய்வோம்!
- லலிதாசுந்தர்

இறகுப்பந்துவிடு தூது

அகரம் அமுதா
காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து!
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்!
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்!
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*!
இழைபோல் இளைத்த இவன்னிலையைச் சொல்லி!
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! !
(ஆகம் -உடல்)!
ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்!
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்!
என்னிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்!
தன்னிலையைச் சொல்வாள் தளர்ந்து!!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்!
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்!
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ!
இறப்பான் இவனென் றியம்பு!!
இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!!
நண்டோடு நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ!
ஒண்டோடித் தன்சொல்லில் உண்டு!!
உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்!
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்!
உளங்கல வாடி உவந்தாள்தன் மேனி!
வளங்கல வாடுகிறேன் வந்து!!
வந்தாறக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்!
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்!
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த!
நன்மையினைச் செய்க நயந்து!!
நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை!
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்!
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்!
தூவிறகுப் பந்தே!போ தூது! (தியங்குதல் –கலங்குதல்)!
தூதாக உன்னையத் தோகை இடஞ்செல்லத்!
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?!
மெல்லபோ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை!
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து! !
(மிறல் -பெருமை)

மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..!

வீ.இளவழுதி
ஏழுமுறை எம்தலைவனை!
ஏற்கனவே கொன்ற!
எமகாதகர்களே!...!
எம்மின அடையாளம்!
எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது!...!
விடுதலை போராட்டத்துக்கு!
விடிவு ஒன்றே தீர்வு!...!
தமிழர்களின் தாகத்திற்கு!
தமிழீழம் மட்டுமே முடிவு!...!
வீழ்ச்சி எமக்கு புதிதல்ல!
வீழ்வதும் மீண்டு எழுவதும்!
விடுதலை புலிகளின் இயல்பு!...!
இழந்த எம் தாய் மண்ணை மீட்டெடுக்க!
இறந்ததாய் நீவிர் சொல்லும்!
தமிழீழ நாயகன்!
மீண்டு(ம்) வருவான்!... !

புண்ணியம்..சோம்பேறி..இனி மீண்டு

சின்னு (சிவப்பிரகாசம்)
புண்ணியம் செய்தவர்கள்.. சோம்பேறி..இனி மீண்டு வருவாயோ இவ்வுலகே!
01.!
புண்ணியம் செய்தவர்கள்!
------------------------------!
ஆழக் கிணற்றினிலே!
நீர் ஊரும் தடம் இருக்கும்!
ஆள் இறங்கி!
துணி நனைத்து குடம் பிழிந்து!
குடம் நிறைத்த காலம் உண்டாம்!
காலமான அப்பத்தா சொன்னது!
மாடு மேயும் புல்லுக் காய்ந்து!
காய்ந்த மண் தலை காட்டி!
வரப்பும் வயலும் மண்ணாய்த் தெரிந்த காலத்தில்!
மலை நாடி!
சிறுபுல்லும் பெரும்புல்லும் சேர்த்து!
கண்ணி கட்டி கட்டுக் கட்டி!
பத்துக் கல் சுமந்து வந்து!
காங்கேயம் காளைகள் வளர்த்ததுண்டாம்!
அப்புச்சி சொன்னது!
விடிந்தால் குடிகிணறு வரண்டிடுமே!
நடுச் சாமம் வரை இருந்து!
நாழிக்கு ரெண்டு குடம் எடுத்தால்!
குடத்துக்கு நீர் இருக்கும் என!
சேந்திய காலம் உண்டு!
நானே கண்டது!
பின் வந்த அரசுகள் புண்ணியத்தில்!
மழை பெய்தாலோ இல்லையோ!
குடிநீருக்கு நீர் கிடைக்குது!
புண்ணியம் செய்தவர்கள்!
இதை செய்து தந்தவர்கள்!
!
02.!
சோம்பேறி!
-------------------!
!
வேதமும் புரியல !
விஞ்ஞானம் தெரியல !
உறவும் பிடிக்கல !
உறக்கமும் பிடிக்கல !
கனவில் வரும் காட்சி புரியல !
காவியத் தலைவர்கள் எனக்குப் பிடிக்கல !
அரசு நடத்த அரசியல் தெரியல !
நீதி சொல்ல அனுபவம் பத்தல !
படிக்கப் பிடிக்கல !
உழைக்கவும் பிடிக்கல !
பசி மட்டும் வாட்டி எடுக்குது !
பட்டினிச் சாவு என்னை நெருங்குது!
!
03.!
இனி மீண்டு வருவாயோ இவ்வுலகே!
-----------------------------------------!
கான மயிலாட !
கானகத்தில் களிராட !
வாடைக் காற்றோடு !
விளைந்த மரங்களுமாட !
இருளோடு இருளாக !
கோட்டான்கள் கவிபாடும் !
நாட்கள் கொண்டுவருவாயோ !
காரை வீடுகளும் !
கானகம் ஆகி!
மதங்களும் மறைந்து !
அறிவியல் அழிந்து !
ஆயுதங்கள் ஒழிய !
இனிதான அவ்வுலகை !
இனி மீட்டுத் தருவாயோ

நண்பர்கள்

ரமேஷ்குமார்
நட்பினை நாங்கள்!
பந்தமில்லா சொந்தமென்போம்..!
சுத்தமான தென்றலென்போம்!
கற்புடைய காதலென்போம்..!
உறவில்லப் பங்காளிகள்!
உள்ளத்தைப் பங்கிடுவோம்..!
உள்ளத்தினை உழவுசெய்து!
உண்ர்வினைப் பயிர்செய்து..!
நட்பென்னும் பயிரினை!
அன்பென்னும் ஆயுதத்தால்!
அறுவடை செய்து!
இன்பத்தில் திளைத்திருப்போம்..!
இனைந்தே வாழ்ந்திருப்போம்…!
உள்ளத்து ஊஞ்சலில்!
நட்பினை அமரவைத்து!
சுவாசத்தின் மூச்சினை!
கையாய்க் கொண்டு!
ஊஞ்சலினை ஆட்டிடுவோம்..!
உணர்வினை இணைத்திடுவோம்..!
தவறுகள் செய்தால்!
தவறாமல் தண்டிப்போம்..!
நன்மைகள் செய்தால்!
நன்றாய் ஆதரிப்போம்..!
உண்மைக்கு உதாரணமாய்!
உலகத்தில் வாழ்ந்திருப்போம்..!
சாகாவரம் ஒன்று!
நட்பிற்க்கு வேண்டுமென்று!
இருகை கூப்பி!
இறைவனை வேண்டிடுவோம்