தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விற்பனைக்காலம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
இருப்பைப்பற்றி !
எந்த உணர்வுமின்றி!
விற்பனைக்குவந்துவிட்டேன்!
விற்பனை!
விறுவிறுப்பாகத்தான் நடக்கிறது!
இல்லையெனும் பதிலின்றி!
இயல்பாய் நடக்கிறது!
கொடுக்கல் வாங்கல்!
இருப்புக்கணக்கு!
சரிபார்த்தலின்றிதான்!
கடைத்திறப்பு நடக்கிறது!
இருப்பென!
இருப்பதைத்தானே!
கடைத்திறப்பில் காட்டமுடியும்!
இருப்பும் குறையவில்லை!
கொடுப்பதும் குறையவில்லை!
இது!
விசித்திர விற்பனைக்காலம்!
இருப்பு குறையுமா?!
விற்பனை குறையுமா?!
துளியும் கவலையின்றி!
துளிர்க்கிறது தளிர்கள்!
நீள்கிறது பாதை!
தேடுகிறது வேர்கள்!
தொடுவானம்போல!
எல்லாம்

துரோகத்தின் தருணம்

ஹெச்.ஜி.ரசூல்
என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்!
வாசல் கதவுகளை!
வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு!
ஒரு துரோகத்தின் அரங்கேற்றம்.!
சட்டைப் பாவாடை அணிந்திருந்த!
விளையாட்டு பொம்மைகள் எழுப்பிய!
அபயக் குரல்கள் தேய்ந்துபோயிருந்தன.!
கிணற்றில் விழுந்த பொறி பரவி!
நீரிலும் நெருப்பு வளர்ந்தது.!
ஒவ்வொரு இரவுதோறும்!
என் முத்தத்தாலும் கனவுகளாலும்!
நிரப்பப்பட்டிருந்த தலையணை!
பதறியடித்துக் கொண்டு!
தப்பித்து ஓட முயன்று சோர்கிறது.!
எனது புத்தக அலமாரியில்!
மிகவும் பாதுகாப்போடு உட்கார்ந்திருந்த!
மார்க்ஸும் செல்வாவும்!
எரிந்து கொண்டிருந்தார்கள்!
சாம்பலின் புதை மேட்டு அனலில்!
உதிர்பிச்சிகளின் மரணவாசம்!
இடைவிடாது துரத்த!
விடாது நெருப்பு பரவுகிறது எங்கும்.!
என்னுடலின் நெருப்பைக் கழற்றிஎறிய!
பலதடவை முயன்றும் தோற்றுப் போகிறேன்

உறுமி எழும்

ஸ்ரீமங்கை
உறுமியும் சலங்கையும் !
ஒரு கணம் ஒடுங்க, !
வியர்த்த முதுகில் பளீரென !
சாட்டையைச் செலுத்துபவனை !
வியந்து பார்த்து வீடியோ எடுப்பான் !
வெள்ளைக்காரன். !
அவனுடன் இருந்தவளின் !
அபரிமித அளவுகளை !
வெறித்துப் பார்த்திருக்கும் !
வேலையற்ற கூட்டமொன்று.. !
இவற்றினூடே, !
உறுமிமேளக்காரியின் !
ஒடுங்கிய முலைஉறிஞ்சி !
உறங்கும் குழந்தை !
வாய்கோணிச் சிரித்து !
அடங்கும் கை பதறி... !
கனவில் !
தனது நாளைய சாட்டையைச் !
சொடுக்கியதென

நசிகேதன் அக்னி.. தீட்டு

தேனம்மை லெக்ஷ்மணன்
01.!
நசிகேதன் அக்னி..!
--------------------------!
முன்னையிட்டதும்.,!
பின்னையிட்டதும்.,!
அன்னையிட்டதும்.,!
என்னையிட்டதும்...!
மண்ணில் பிறந்ததும்.,!
மண்ணை பேர்த்ததும்..!
தீக்குள் நுழைந்ததும்..!
மண்ணில் புதைந்ததும்..!
எந்தன் செயலல்ல..!
மந்தன் செயலதோ..!
சந்தேகங்களை!
தேகம் சுமப்பதோ..!
மண்ணை ஆளவும்.,!
விண்ணை ஆளவும்!
அஸ்வமேத யாகப்!
பெண் பொம்மை போதுமே..!
உந்தன் யாகத் தீ..!
என்னை ஆ(க்)குதீ...!
நீ நிறை சொர்க்கம் ஏக!
நான் நசிகேதன் அக்னி..!
02.!
தீட்டு!
---------------!
பாத்ரூம் போனால்!
காவலாய் சத்தகம்..!
படுக்கை பக்கம்!
தடுப்பாய் உலக்கை.!
தலைக்குக் குளித்தாலும்!
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி!
தனித்தட்டு., தனி டம்ளர்..!
தனி நாடு கேட்காத!
எனக்கு தனியிடம்..!
துண்டு நிலம்..!
தோல் தலையணை..!
கிணறு வற்றிவிடும்.,!
செடி பட்டுவிடும்..!
ஊறுகாய் கெட்டுவிடும்.!
கருப்பை சூல் சுமக்க!
மகரந்தம் பக்குவமாக்கும்!
பருவத்தின் சுழற்சி இது,..!
சாமி படைத்த என்னை!
மறைக்க சாமிக்கு!
ஏன் திரைச்சீலை..!
பின் குழந்தைகளோடு!
இருக்கும் கடவுளர்கள் மட்டும்!
எப்படி தீட்டுக்களற்று

தமிழா ! நீ அழவேண்டாம்

நிர்வாணி
தமிழா !!
நீ அழவேண்டாம்!
எதற்காக அழவேண்டும் ?!
எல்லாம் இழந்துவிட்டாய்!
உலகத்தின் மூலைகளில் அகதியாய்!
ஒதுங்கியும் விட்டாய்!
இனிமேலும் எதற்காக அழவேண்டும்?!
“தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா“ !
பாடியவனும் உயிரோடில்லை!
தலை நிமிர்ந்து நிற்க தலைகளே இல்லாமல்!
எத்தனை தமிழர்!
சுற்றம் சேராமல் ஒப்பாரியுமில்லாமல்!
அழுகல் பிணங்களாய்

மறந்தாலும்

விஷ்ணு
இமைகளை !
மூடினால் உன் பிம்பம் ... !
இதழ்களோ ,... !
உன் பெயரை !
மட்டுமே !
உச்சரிப்பேன் என்கிறது ... !
உன் !
கவிதைக்களுக்கு !
மட்டுமே !
என் காதுகள் !
கவனம் கொடுக்கின்றன ,.... !
!
காணாமல் போகிறதே !
இவ்வுலகம் !
கண்முன்னில் !
கண்ணா என்ற உன் !
காந்த அழைப்பில் .. !
!
ஏன் இத்தனை ....!
என் சுவாசத்தை !
கொஞ்சம் !
வாசித்து பாரட ... !
வாசமாய் வீசும் !
உந்தன் நினைவே !
எந்தன் மூச்சாய்,.. !
!
உளம் துடிக்க !
மறந்தாலும் ... !
உயிர் எரியும் !
ஜோதியாய் ... என்றும் !
உனை பிரகாசிக்க !
தீபமாய்

ஒற்றைக் கல்.. மௌனத் திரை.. ஜாடைத்

இளங்கோ -கவிதைக்காரன் டைரி
ஒற்றைக் கல் சுவரின் உச்சி..மௌனத் திரை வார்த்தைகள்.. ஜாடைத் தருணங்கள்..!
01.!
ஒற்றைக் கல் சுவரின் உச்சி..!
----------------------------------------!
சொற்களின் வழியே நீந்துதல்!
மொழியின் மூச்சுத் திணறலோடு!
மூழ்க செய்கிறது உடலை!
மழைக்குப் பின் கொடிக் கம்பியில்!
தொங்கும் துளிகளோடு!
நிகழ்த்தும் உரையாடல்!
ஈரப்படுத்துகிறது உதடுகளை!
மரணத்துக்கு நிகராகும்!
படிமமொன்றும் விறைத்துக் கொள்கிறது!
தன் கண்களை நிலைக்குத்தி!
ஒற்றைக் கல் சுவரின் உச்சியில்!
பதிந்து கிடக்கும் கண்ணாடிச் சில்லுகள்!
உடைத்துத் தூவுகிறது!
இக்கணத்தின் மீது தன் மாலை நேர வெயிலை!
!
02.!
மௌனத் திரை வார்த்தைகள்..!
----------------------------------------!
விரல்களோடு கோர்த்துக் கொள்ள!
ஏங்கும் ஸ்பரிசத்தை!
வெப்பம் இழைத்து நீவுகிறாய்!
கிறக்கத்தோடு நோக்கும் விழிகளைப் பருகி!
மௌனத் திரை அசையும்!
நிழலைப் பிடித்து உடலைச் சுற்றுகிறாய்!
வார்த்தைகள் பொத்தலிட்டு சல்லடையாய் வழிகிறது!
இதுவரை ஏற்றி வைத்திருந்த அர்த்தங்கள் யாவும்!
நீங்க மறுக்கும் முத்தப் பதிவுகளை!
ஒற்றியெடுக்கும் இதழ்கள் தயக்கத்தோடு பிரிகிறது!
காற்றில் உலர்ந்து!
நீ!
பிரிவோடு கையசைக்கும் கணத்தை!
உன்னோடு இழுத்துப் போகிறது!
உன் ரயில் !
!
03.!
ஜாடைத் தருணங்கள்..!
----------------------------!
அம்பறாத்தூணி!
முழுவதும் செருகி வைத்திருக்கிறாய்!
கூர் மழுங்கா!
புன்னகை அம்புகளை!
ஒவ்வொரு!
ஜாடைத் தருணங்களிலும்!
பிசகாமல் என்னை நோக்கி!
நாணேற்ற வளைகிறது!
உன்!
இதழ் நுனி

மயிலிறகுக் கனவுகள்

ராமலக்ஷ்மி
படிக்கப் போவதாய் சொல்லி!
புத்தகங்கள் கையில் ஏந்தி!
படிப்படிப்பாய் தாவி ஏறி!
மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்!
சாய்வாய் உள்ளடங்கி-!
புத்தகத்தை கைகள் விரிக்கையில்!
விழிகள் விரிந்ததென்னவோ!
விண்ணினை நோக்கி.!
கண் எட்டிய தூரமெல்லாம்!
அகண்ட பெருவெளியாய்!
அது ஒன்றே தெரிந்திட-!
உலகமே அதுதானோ என!
வானின் அழகில்!
மனமது லயித்திட..!
பொதிப் பொதியாய்!
நகர்ந்திட்ட வெண்பஞ்சு!
மேகக் கூட்டமதனில்!
பலப்பல வடிவங்களை!
உள்ளம் உருவகப்படுத்தி!
உவகை கொண்டிட-!
கூடவே குடை பிடித்து!
உற்சாகமாய் கனவுகள்!
ஊர்வலம் சென்றிட..!
கூட்டம் கூட்டமாய்!
பறந்திட்டக் கிளிகளோ!
கூட வாயேன் நீயுமெனக்!
கூப்பிடுவதாய் தோன்றிட-!
இல்லாத இறக்கை!
இரண்டால் எம்பிப்!
பறக்கவும் துவங்கிடுகையில்..!
தலைமாட்டுச் சுவற்றின்பின்!
தலைதட்டி நின்றிருந்த!
கொய்யாமரக் கிளையிலிருந்து!
கூடு திரும்பிய!
காகமொன்று கரைந்திட-!
மறைகின்ற சூரியனுடன்!
கரைகின்ற வெளிச்சம்!
கவனத்துக்கு வந்தது.!
மூடியது பதிமன்!
மடியிலிருந்த புத்தகத்தை-!
மயிலிறகெனக் கனவுகளைப்!
பத்திரமாய் உள்வைத்து-!
கரைந்திடுமோ அவையுமென்ற!
கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி-!
படிக்காத பாடங்கள் மட்டுமே!
பாரமாய் நெஞ்சில் இருக்க

நிலவோடு நீ வருவாய்

நாவாந்துறைடானியல் ஜீவன்
நாவாந்துறை டானியல் ஜீவா- !
நீ விழித்திருக்கும் போது !
நான் தூங்கிறேன் !
நீ தூங்கும் போது !
நான் விழித்திருக்கிறேன். !
நீயொரு தேசமாய் !
நானொரு தேசமாய் !
ஆயினும் !
கனவில் கூட !
உன் !
கண்கள்தான் !
ஓ வென்று அழுதாலும் !
சீ என்று சினந்தாலும் !
மனதில் நிலையாய் !
நிற்பது !
உன் வார்த்தைகள் !
மட்டும்தான் ..! !
நீயிருக்கும் போது !
என் இதயம் !
இடிபோல !
சுமைகளும் !
சுகமாய் சுமக்கும் !
நீயில்லா !
என்னிடம் !
இளவம் பஞ்சுக் !
கனம் போல் !
நெஞ்சில் !
இறங்கினாலும் !
நெருப்பில் விழுந்த !
புழுவைப் போல் !
நெகிழ்கிறேன் . !
தெருவில் !
இறங்கினால் !
நிலவோடு !
நீ வருவாய் !
நான் !
வேலைக்குச் சென்றால் !
என் உடையோடு !
நீ ஒட்டிக் கொள்கிறாய் !
வீடு திரும்பி !
தூங்க !
துணைக்கு !
நீ வருகிறாய் !
என் உடலே !
உனக்காக !
உருவெடுத்திருக்கின்றது. !
என் விழிகள் !
விழித்தாலே !
உன் நினைவோடு !
நீர்த்திவலை !
ஆயினும் ..? !
கடந்த கால வாழ்க்கை !
என்னைப் பக்குவப்படுத்தியதினால் !
நான் !
எனக்கான !
விடுதலையை !
வெல்ல வேண்டுமென்றென்.... !
நீ !
உன்னால் அதுவரை !
காத்திருக்க முடியாதென்றாய் !
நம் நெருக்கம் !
நேர்கோட்டில் !
நகர மறுக்க !
முறிந்தது !
நம் உறவு !
உன்னைப் பிரிந்தது !
துயரமா ? !
அது சொல்லி !
மாளத் துயரம் !
குற்ற உணர்ச்சி !
கூனிப்போக !
மனசு வலித்தது. !
வெகு நாளாய் !
தூக்கம் வரல... !
நீ பிரிந்த போதே !
என் உயிரும் !
பிரிந்திருக்க வேண்டும்.... !
எதற்காக இன்னும் !
என் உடலில் உயிர் ..? !
............. !
பனிப்புலத்து !
பட்டமரமொன்று !
தனக்குள் தன்னுயூரை !
தேக்கி வைத்திருப்பது போல்

பசியே மரணமாய்

சிலம்பூர் யுகா துபாய்
(ஒரு எத்தியோப்பியனின் இரங்கல்)!
நாங்களும்!
மண்ணும் ஒன்றுதான்!
மக்கியதுணிகளை!
உண்பதினால்..!
வறுமையின்!
கண்காட்சியில்!
பசியைஉடுத்தியபடி!!
எங்களிடம்!
இனி என்னயிருக்கிறது!
இழப்பதற்கு!
உயிரையும்,!
பசியையும்தவிர.!
கண்ணியம்,!
கட்டுப்பாடு,!
கற்பு!
என்பதெல்லாம்!
கொழுப்புமிகுந்தவர்களுக்கு!
வயிறு நிறைந்தவனால்!
வலியுறுத்தப்படுவது!!
எங்களுக்கு!
இதைப்பறியெல்லாம்!
கவலைப்பட!
என்னயிருக்கிறது!
வறுமையே!
தேசியமாய் ஆனபோது!!
பகிர்ந்துண்ணும்!
பழக்கத்தை!
இன்னும்!
மானுடம்படிக்கவில்லை.!
கடவுளே!
சிலிக்கன்மண்ணின்!
சிறப்பை!
அவனிக்கு!
அறியக்கொடுத்தது மாதிரி!
பாலைவன மண்ணுக்குள்ளும்!
எதையாவது!
பதுக்கிவைத்திருப்பாயே!
இன்றே அதை!
மானுடத்திற்கு!
அறியக்கொடேன்!!
பாவம் அவர்கள்!
உயிர்வாழ்ந்துபோகட்டும்.!
கொடுமை இறைவா!
பசியே!
மரணமாவது.!
கொடுமையிலும் கொடுமை!
அதுவே தொடர்வது