முற்று பெறாததாய் - உமா

Photo by Sonika Agarwal on Unsplash

 
புதிதாய்
படைக்க படும் எதுவுமே
பொலிவு தாங்கி வரும்......!
ஆனால் .,
உருவாகும்  போதே
உருக்குலைந்து  போய் உள்ளது
உலக தாயின் ஓர் ஓவியம் .
காரணம்,
வறுமை எனும் தூரிகையால்
தினமும் கிறுக்கபடுகிறது அவள் உருவம் .
எதுகை மோனையினாலோஎன்னவோ அந்த
வறுமை தேவதைக்கு வண்ணம் தீட்ட
கருமை மட்டுமே எடுப்பாய் போனது

இருக்கமான அவளது உதடுகளுக்கு
உறைந்து போன ரத்தத்தால் சாயம்
விடியலுக்கான விடை அறியா
காரிருளில் குருதி புனல்
பாய்ந்து கொண்டு இருக்க ,
எலும்பு துண்டுகளின் மேல் அமர்ந்து
முராரி ராகம் ரசிக்கும்
அந்த உலக தேவதையின் ஓவியத்தை
வறுமை எனும் தூரிகை கொண்டு
வரைபவர் கைகளின்
சுக்கிர மேடுகளில்
எல்லாம் மட்டும் ,
அக்னி குழம்பு
கொந்தளிப்பதால் ,
எளிதில் ஆரா
கொப்பளங்கள் .....!
அதாலோ என்னவோ,
முற்று பெறாத ஓவியமாய்

கிறுக்க பட்டு கொண்டே
இருக்கிறாள் உலக தாய்.!
 
உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.