காண வேண்டி - உமா

Photo by Ben Hershey on Unsplash

வியாபித்து இருந்தன
என் கனவுகள் புவனமெங்கும்
என்று உன்னை கண்டேனோ
அன்று முதலாய்
முகவரி கூட அறியா
உன் நினைவுகளுடனே
முடங்கி போயின அவை

வாகன நெரிசலில் கூட
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியாய்
எங்கும்  உன்னை
தேடி  தொலைகிறது
என் மனம்!

என் வாழ்க்கை திருப்பத்தில்
தேடாமலே    கிடைத்தாய்!
கிடைத்தும்  தொலைத்தேன்!
தொலைத்தும்  தேடுகிறேன்!
தேற்றம்  அடைய  முயன்று
மறுபடி  தோற்கிறேன்
என்னிடமே  நான்!

என் இதய தோட்டத்தில்
காதல் மொட்டுக்கள்.
தவிப்பு  எனும் நெருப்பில்
ஜனகனின்  மகளாய்
தினம் தினம்
தீ குளிக்கிறது  என் மனம்
பூக்க  துடிக்கும்  அவைகளுக்கு
கண்ணீர் அல்ல
தரிசனம்  என்னும்
தண்ணீர் ஊற்றி  விட்டு  போ
உயிர் பெற்று விடும்
உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.