கற்பென்பது - சு.மு.அகமது

Photo by Adrien Delforge on Unsplash

சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று

பேரலையின் ஆரவாரம்

தலையாட்டும் பெருந்தருவின்
எதிர்வினை செயலற்றுப்போய்
மென்னியம் உதிக்கிறது

படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்

ஆரம்பம் இப்படித்தான்...

புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க  புசியப் பழகினதாய் ..

சுவைத்துப் பழகினவை

செறித்துப் போனதால்
திளைத்துப் போகும்
அதன் உலைகள்

தெறிக்கும் துளிகளில்
நான் பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு

விந்தையின் மேலணியில்
நான் கற்றேன்  நீ கற்பித்தாய்
'கற்ப'து’ பொதுவானது
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.