கலைஞனும் கடவுளே - உமா

Photo by Jr Korpa on Unsplash

கலைஞன் ஒரு படைப்பாளி!
அவன் படைக்கும் படைப்புகளுக்கு
அவனே ஆதி மூலம்!

சொல் புத்தி கேட்டு ,
சுய புத்தி கொண்டு ,
வறுமை நோக்காது ,
வருமுன் காக்காது ,
கற்பனை திறனும் ,
கற்று அறிந்த அறிவும் வைத்து ,
தொலை தூர நோக்குடன்
தொடுக்க படும் மாலை
இவன் படைப்புகள்

உருவாக்கம் மட்டுமே
இங்கு உன்னத நோக்கம்!

கலைஞனோ ,
தன் படைப்புக்கள்
பக்குவமடையும் வரையில்
பக்தனாய் இருக்கிறான்

பல வித பரிகாசங்களை
தாண்டி பிரகாசிக்கையில்
பரமாத்மா ஆகிறான்

மொத்தத்தில்
மோசமான விமர்சகனும் அவனே.
முதல் ரசிகனும் அவனே .

படைக்கப் படும் படைப்போ ,
படைப்பு வகுக்கும் துறையோ ,
எது எங்ஙனம் ஆயினும்
கலை வழி தன்னை செதுக்கி
தன்னை கொண்டு
கலையை வளர்க்கும்
ஒவ்வொரு கலைஞனும் கடவுளே
உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.