குழப்பம் - புவனா பாலா

Photo by Sharon McCutcheon on Unsplash

நான் இவரை போல உயர வேண்டும்!
அவரை போல வாழ வேண்டும்!

என்று… எண்ணும்போதெல்லாம்

முகநூல் விரும்பிகளும்,
வாட்சப் வதந்திகளும்- என்

முன் உதாரண காரணிகளின்
கடந்தகால கண்ணுக்குத் தெரியாத

கருப்பு பக்கங்கள் என்று கண்டதை
காட்டும்போதும், எழுதும்போதும்

என் மனம் குழம்பி வாடுது ,
உலகம் வெறுத்து போகுது

இப்படி என் உந்து சக்திகளின்
உயர்குணமெல்லாம்-சில

புறங்கூறும் சக்திகளால்
ஓய்வெடுத்துக் கொள்ளும்போது!..

முன்னேற துடிக்கும் என்
செயலிழந்து போகிறேன்!
வாழ வழி துறந்து நிற்கிறேன்!!
புவனா பாலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.