நண்பனே - புவனா பாலா

Photo by Jr Korpa on Unsplash

ஆறறிவு நண்பனே நில்லு !
நீ எங்கே போகிறாய் சொல்லு ?!

இருட்டில் ஒளிந்த இயற்கை
அதன் அழகை காட்டி இருக்கு!

ஆதவன் அன்பை பருகிய மொட்டு
பூவாய் பிறந்திருக்கு

பார்வையாளர் யாருமின்றி
பாராட்டு ஏதும் தேவையின்றி
பறவை பாடியிருக்கு

உன் இனம் உன்னை பார்த்திருக்கு
மரங்களும் உன்னுடன் நடந்திருக்கு

இதை காணாது நீயும்
கை பேசியோடு கலந்து
எங்கே போகிறாய் சொல்லு ?

இப்படி மனிதனும் மறந்து
இயற்கையும் துறந்து
நித்தமும் உன் பயணம் தான்

எங்கே சொல்லு !

ஆறறிவு நண்பனே நில்லு !
நீ எங்கே போகிறாய் சொல்லு!
புவனா பாலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.