வலி உணரும் தோல்கள் - ரசிகவ் ஞானியார்

Photo by Kilimanjaro STUDIOz on Unsplash

தவித்த வாய்க்கு ...!
தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்!!
தாகம் தீருமுன்...!
தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ?!
நாங்கள்!
தண்ணீர் கேட்டால்!
இரத்தம் தருகின்ற...!
உங்கள் பெருந்தன்மைதான் என்னே!!
!
நாற்காலிகள்!
நகர்ந்துவிடக்கூடாதென்றா!
அருவியின் வெள்ளத்தில்...!
அணை கட்ட முயல்கின்றீர்கள்?!
!
நீங்கள் தண்ணீர் சேமிக்க…!
நாங்கள் அணை கட்டிக்கொடுத்தோம்!!
நாங்கள் கண்ணீர் சேமிக்க…!
நீங்கள் அணை கட்டுகின்றீர்கள்!!
!
தலைமுடியை வெட்டுவதற்கெல்லாம்!
உங்களிடம்…!
அனுமதி கேட்டால்,!
எங்கள்!
தலைமுறைகள்...!
பட்டுப்போய்விடும்!!
!
கடந்து சென்ற காலத்தையும்…!
கடந்து வந்த நீரையும்…!
திருப்பி எடுக்க!
எவனும் பிறக்கவில்லை!!
யாருடைய மொழி சிறந்தது!
என்பது!
இன்னொரு பக்கம் இருக்கட்டும்!!
ஆனால்!
வலி உணரும் தோல்கள்தான்!
இருவருக்கும்!!
!
-ரசிகவ் ஞானியார்
--------------------------!
K.Gnaniyar,!
Software Developer,!
TransIT mPower Labs,!
Bangalore
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.