தூண்டிற்புழு - ப.மதியழகன்

Photo by Ryan Grice on Unsplash

மெளன மொழி புரிகின்றது
மனதின் வேஷம் கலைகின்றது
முகமூடி உருக்குலைகின்றது
மனிதமுகம் தெரிகின்றது
மழலை தேனாய் இனிக்கின்றது
மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது
வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது
மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது
நாட்கள் கணமாய் ஓடுகின்றது
நதியலைபோல் சூழ்நிலை மாறுகின்றது
தோல்வி கூட இனிக்கின்றது
வெற்றி எதில் இங்கு இருக்கின்றது
தடுக்கிவிழ கால்கள் துடிக்கின்றது
தாங்கும் கைகள்
அவளுடையதாய் இருக்க வேண்டுமென
உள்ளம் தவம் கிடக்கின்றது
கடிதங்கள் தூது போகின்றது
கவிமகளை நெஞ்சம் நாடுகின்றது
மழை வந்து மேனியை நனைக்கின்றது
அவளைச் சந்திக்காமல் உள்ளம் கொதிக்கின்றது
ஆகாரம் கண்ணெதிரே இருக்கின்றது
எண்ணச் சிறகுகள் எங்கெங்கோ பறக்கின்றது
காலை கதிரொளி எழுகின்றது
கனவுகள் விடை பெறுகின்றது
உறக்கம் மெல்ல களைகின்றது
உண்மை வேறாய்த் தெரிகின்றது
காட்சிகள் பொய்யெனப் புரிகின்றது
கற்பனை நின்றிட மறுக்கின்றது
இங்கு எல்லாம் சரியாய் இருக்கின்றது
வேறெங்கே என்னைத் தொலைக்கின்றது
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.