மாயத்தோற்றம் - பாவண்ணன்

Photo by Sajad Nori on Unsplash

தாள்களுக்கிடையே வைத்து மூடிய
மைதோய்ந்த நூல்
விதம்விதமாக இழுபடும்போது
உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள்
ஒரு தாளில் தென்படுகிறது
ஊமத்தம்பூ
இன்னொன்றில் சுடர்விடுகிறது
குத்துவிளக்கு
அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது
அலை உயர்த்திய கடல்
அதற்கடுத்து படபடக்கிறது
முகமற்ற பெண்ணின் விரிகுழல்
பிறிதொரு பக்கத்தில்
உடலைத் தளர்த்தி
தலையை உயர்த்தி
செங்குத்தாய் விரிந்த
பாம்பின் படம்
பாவண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.