அகாலம் - ப.மதியழகன்

Photo by Jr Korpa on Unsplash

விடியலிலேயே
துக்கச் செய்தி காதில் விழுந்தது

ஏறக்குறைய
என் வயது தான் இருக்கும்
டேங்கர் லாரியின்
அகோரப் பசிக்கு சிக்கியது
அவனது இரு சக்கர வாகனம்

மரணச் செய்தியை கேட்டவுடன்
மனதில் ஏற்படும் அதிர்வுகள்
சொல்லில் அடங்காதது

இசை நாற்காலி போலல்லாமல்
எல்லோரும் உட்காரத்தான் வேண்டும்
அந்த நாற்காலியில்
சுதந்திரத்துக்கு ஏங்கியே
சுழலுகின்றன

கிரகங்களெல்லாம்
சூரியனின் இழுவிசையிலிருந்து
பூமி விடுபட்டால்
மனித இனம் என்னாகும்
யோசிக்கவே பயமாயிருக்கிறது
நடப்பதெல்லாம் துக்ககரமாயிருக்கிறது

கைவிடப்பட்ட உலகம்
என்றாவது ஒரு நாள்
நம்மை மென்று விழுங்கும்
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.