மேகமாய் - பாண்டித்துரை

Photo by Craig Bradford on Unsplash

நர்மதை நதி.!
சரோபவர் அணைக்கட்டு.!
23 ஆண்டு தவம்!!
ஆர்பாட்டமே இவளின் வாழ்க்கை,!
ஆர்பணிப்பே இவளின் வேட்கை.!
நர்மதை நதி கூட!
இவள் நாடியின் துடிப்பறியும்,!
மேகத்தின் துளி கூட!
மேதாவின் சொல் கேட்கும்,!
மேதா பட்கர்.!
அரசியலுக்கு அப்பாற்பட்டு!
அகிம்சா வழியிலே,!
தொலைநோக்கு பார்வைகொண்டு!
தொடர் உண்ணாவிரதம்,!
உயிரையும் விடத்தயார்!
அணை உயர்வதை தடுத்திடவே,!
மக்கள் செத்து வீழ்ந்தாலும்!
செவிசாய்க்க மறுக்கும் அரசின்!
செவியில் அறைந்து கேட்கும் தைரியம்,!
இவள் நலத்தில் இன்னல்கள் விரும்பும்,!
பொது நலத்தில் தன் நலன் மறந்தும்.!
தனியொரு மனிதமாக!
இத்தரணி முழுவதும் சிறந்தும்,!
மக்கள் நலன் காக்கும்!
இவள் ஆத்மா!
மனித நேயத்தில்!
மகாத்மா!
இவளின் அரவணைப்பு இருக்கும்வரை!
அணைஉயரா!!
இவள் அயர்ந்த பின்னே?!
!
எழுத்து: பாண்டித்துரை
பாண்டித்துரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.