பஞ்ச பண்டவர்கள் - முத்தாசென் கண்ணா

Photo by FLY:D on Unsplash

(வறட்சியினால் விவசாயிகள் எலிக்கறி தின்று உயிர் வாழ்ந்தார்கள் என்ற செய்தி உண்மையென்றால் இந்த புலம்பலும் உண்மை தான்)!
எத்தன மொற ஏறுழுதும்!
எள்ளுளுந்து வெளையலையே!
எட்டி எட்டிப் பாத்தாலும்!
ஒசந்த மானம் கருக்கலையே!
கொழும்பு ஊத்துன சோறெல்லாம் !
கொழுத்துப் போன ஜனங்களுக்குத்தான்!
எத்தினி வருசம் கடந்து போனாலும்!
ஏழைக்கு எப்பவுமே எள்ளுருண்டைதான்!
ஒத்த வேல கஞ்சி ஊத்தி!
கட்ட உசிர புடிச்சு வெச்சிருக்கோம்!
இப்படியே ரெண்டு நா கடந்தா!
இருக்கப்போறது ஒடம்பு மட்டும்!
ஒடையெல்லாம் வத்திப்போச்சு !
இந்த கூழாங்கல்லுக சாகலியே!
திங்க மணல தேடினாலும்!
லாரி போக நிக்கலியே!
இதே கேள்விய நாங்களும்!
எத்தினி நாளா கேட்டுகிட்டிருக்கோம்!
இப்பவாவது உண்மைய சொல்லுங்க !
எப்பத்தான் எங்களுக்குத் தை பொறக்கும்?!
-- முத்தாசென் கண்ணா
முத்தாசென் கண்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.