ஐய்யனாரு சாவதில்லை - முத்தாசென் கண்ணா

Photo by FLY:D on Unsplash

முட்ட வந்த கெடாவ !
எட்டி உதைக்கப் போன என்னைய !
தடுத்துவிட்டு !
ஆத்தா சொல்லுச்சி !
கூடாதய்யா அது ஐய்யனாரு !
கூழு ஊத்தின நாளப்போ !
அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி !
ஆத்தா ஐய்யனாரு !
செத்துப் போச்சுன்னேன் !
இல்ல மவராசா !
அந்தா பாருன்னு !
குங்க மஞ்ச தடவி வச்சுருந்த!
கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா !
கைய நீட்டிச்சி என் ஆத்தா !
!
-முத்தாசென் கண்ணா
முத்தாசென் கண்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.