மாட்டுப் பொங்கல் - முத்தாசென் கண்ணா

Photo by Tengyart on Unsplash

முதல் நாள்!
பொட்டிட்டு!
கொம்பில் வண்ணமாய் துணி கட்டி!
சூடம் காட்டி!
முன்னால் விழுந்து எழுந்து!
உணவளித்து!
ஒரு நாள் ஓய்வும் அளித்தான்!
உழவன்!
மறுநாள்!
முதல் நாள் களிப்பில்!
முன்னரே விழித்தெழுந்தது!
மாடு!
காலை விண்ணப்பத்தைக்!
கடவுளிடம் வேண்டியது!
இறைவா ! நன்றி!!
வருடம் முழுவதும்!
தன் வயிற்றுக்காக!
வேலை வாங்கி!
உனக்காக பயந்து!
ஒரு நாள் மட்டும் ஓய்வளிக்கும்!
கள்ள எண்ணம் கொண்ட!
மனிதனாய் படைக்காமல்!
மாடாய் படைத்ததற்கு!
''இருந்தும் ஒரு நப்பாசை!
மாதம் ஒரு முறை வரட்டுமே!
மாட்டுப்பொங்கல் என்று!
ஆனால்!
அதன் முந்திய நாள்!
பக்தன் அளித்த பொங்கல் உண்ட மயக்கத்தில்!
இறைவன் இன்னும் துயிலெழவில்லை என்பதை!
மாடு அறியாது !!
பாவம் அதற்கு ஐந்தறிவுதானாம்.!
-முத்தாசென் கண்ணா
முத்தாசென் கண்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.