சீருடை நாட்கள் - முத்தாசென் கண்ணா

Photo by Jan Huber on Unsplash

அருணாக்கயிறில் குடித்தனம் நடத்திய !
அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின் !
வாசனையை உணர முடிகிறது...!
என் பழைய பள்ளிக் கட்டடத்தை!
கடந்து போக நேர்கையில்!
பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்!
அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்!
ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்!
தேசியக் கொடியைத் தலைகீழாக!
குண்டூசியில் ஏற்றிய !
ஆகஸ்டு பதினைந்துகளையும்!
எல்லப்பனின் தகர டப்பாவை !
மறைத்து வைத்ததனால் ஏற்ப்பட்ட மனஸ்தாபத்தில் !
இன்று வரை பேசாமலிருப்பதும்!
கூட்டாஞ்ச்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய!
சொப்பு விளையாட்டுகளையும்!
அசைபோடத் தோன்றுகிறது...!
மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி!
என்கிற என் மகனின் குரலால்...!
-முத்தாசென் கண்ணா
முத்தாசென் கண்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.