இறையருளோ? - முருகடியான்

Photo by FLY:D on Unsplash

நாயர் பிடித்த புலிவால்போல்!
நானும் பிடித்தேன் கவிவாலை!!
காயும் கனியும் பறித்துண்டு!
களிப்பில் கசப்பில் கலக்குண்டு!
தேயும் வயதும் தெரியாமல்!
திரையும் நரையும் புரியாமல்!
ஓயும் உடலென் றுணராமல்!
உழைக்கச் செய்வதும் இறையருளோ?!
!
மரபுச் சிலுவை சுமந்தாலும்!
மரண மனக்கவல் தொடவில்லை!!
சிறகை உறவுகள் அறுத்தாலும்!
செந்தமிழ்த் தாய்க்கை விடவில்லை!!
பரவிச் சென்றன உணர்வலைகள்!
பழியில் புகழில் சிலநிலைகள்!!
திரவஞ் சிலநாள் திடஞ்சிலநாள்!
திரிந்திட வைப்பதும் இறையருளோ?!
!
எண்ணத் தறியில் நூலிழையில்!
எத்தனை உடைகள் நெய்தாலும்!
வண்ணப் பணமெனும் நிறப்பூச்சு!
வாய்த்தால் வளர்வது புகழ்ப்பேச்சு!
இன்னல் இழப்பும் எத்தனையோ,!
இறைவன் தந்ததென் றெண்ணாமல்!
என்னால் வந்ததே எனநினைக்கும்!
இயல்பைக் கொடுத்ததும் இறையருளோ?!
!
-பாத்தென்றல்.முருகடியான்
முருகடியான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.