குயில் அண்ணன் - முருகடியான்

Photo by FLY:D on Unsplash

வேரை மறந்த!
விழுதுக லாகி!
வீணே கழிக்கின்றார் நாளை! -சில!
விளைச்சல் சுண்ணாம்புச் சூளை! -தமிழ்த்!
தேரை இழுத்திடுந்!
தாம்புக ளானால்!
தமிழ்,மலர்ப் பூத்திடுஞ் சோலை! -அதில்!
தங்குந் தமிழ்க்கதிர் காலை!!
!
வண்ணம் படித்திட!
எண்ணம்வந் தால்கவி!
அன்னம் நடந்திடும் பாட்டில்! -குயில்!
அண்ணன் பிறப்பானின் நாட்டில்! -புதுத்!
தென்னங் குரும்புகள்!
முற்றிக் கனிந்திடத்!
தேவன் திருக்குறள் ஏட்டில்! -கற்றுத்!
தேர்ந்திருப் போம்கவிக் கூட்டில்!!
!
என்னை நன்றாய்!
இறைவன் செய்தனன்!
தன்னைத் தமிழ்செயு மாறாம்! -அந்தத்!
தத்துவ மேதமிழ் வேராம்! -தமிழ்!
அன்னை நிலைப்பதும்!
அழியா திருப்பதும்!
அவளுக்கு நம்கை மாறாம்! -இதை!
அறிந்தால் தமிழ்பெறும் பேறாம்!!
!
-பாத்தென்றல்.முருகடியான்
முருகடியான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.