நல்லுமரமும் ராசாதிண்ணையும் - மன்னார் அமுதன்

Photo by Sajad Nori on Unsplash

பாட்டையா ஒரு!
விதை விதைத்தார்!
மந்தையில்!
ஆலவிதையாயினும்!
நல்லு மரமாய் வளர்ந்தது!
பாட்டையாவின் பெயரோடு!
ஊரார் ஓய்வெடுக்கவும்!
ஒன்றுகூடவும் !
உதவியது நல்லுமரம்!
விழுதுதுகள் எழுகையில்!
வயோதிபர்களின்!
வேடந்தாங்கலாகியிருந்தது!
அப்பா அதைச் சுற்றி!
திண்ணை கட்டினார்!
ஆடுபுலி ஆட!
ஏதுவாயிருந்தது!
ராசாதிண்ணை!
ஆல் வேரற்றிருக்கையில் !
நாகரிகம் அறிந்திருந்தேன்!
நல்லுமரத்தை !
விழுதுகள் தாங்கிக்கொண்டன!
பாட்டைவும் அப்பாவும்!
பாரமாயிப் போயினர்!
எனக்கு!
இப்போதெல்லாம் !
வெறிச்சோடிக்கிடக்கிறது!
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.