அடிமைகளின் சாதனைகள் - மன்னார் அமுதன்

Photo by Annie Spratt on Unsplash

பெரும்பாண்மையான காலங்களில்
நாம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்
பெரும்பாண்மையினரால்...

உணர்வுகள்
ஒடுங்குமளவிற்கான அடிகள்
உள்ளும் புறமும்

இருப்பினும்...
இருப்பினும்...
மார் தட்டிக் கூறுவேன்..

மனித உரிமைக்காய் முழங்கும்
எம்மினத்தால் தான்
ஊருக்கு ஒதுக்குப் புறமாய்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
“இரட்டைச் சுடுகாடு”
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.