ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும் - கோகுலன்

Photo by FLY:D on Unsplash

நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்!
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்!
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்!
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்!
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்!
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து!
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்!
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!!
தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின் !
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு!
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்!
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்!
பழகினோம் சிரித்தோம் களித்தோம்!
இன்னும் பிறந்திராத நம்!
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்!
தும்பிகளுடன் விளையாடியும் !
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்!
சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின் !
அச்சிறு பயணம் முடித்து !
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்!
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில் !
அமைந்திருந்ததை அறிந்தோம்!
அதன்பின், உன்னுடையது என்னுடையதென!
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில் !
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்!
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்!
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்!
மீண்டும் இணையுமந்த பாதைதேடியே!
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் !
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து !
அர்த்தமாய் புன்னகைக்கிறன காட்டுப்பூக்கள்
கோகுலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.