துளிகளே தூண்களாய் - கோகுலன்

Photo by Dan-Cristian Pădureț on Unsplash

கருகிப்போகும் பயிர்களுக்கும்!
உருகிப்போகும் உயிர்களுக்கும்!
ஊட்டத்தின் ஆதாரமான மழைத்துளிகள்!!
வாழ்வின் உயர்வுக்கும்!
உலகின் வளமைக்குமான பாதைகளில்!
வழிநடத்தும் உழைப்பின் !
வியர்வைத்துளிகள்!!
சாலையோரம் முதியோரை!
பிச்சையெடுக்கும் சிறுவர்களை காண!
கருணையுடன் பொங்கிவரும் !
கண்ணீர்த்துளிகள்!!
சந்ததிகள் விதைத்திடும் !
உயிர்த்துளிகள்..!
கவலைகளின் மருந்தாய் !
மழலை முத்தத்தின் எச்சில்துளிகள்..!
என,!
துளிகள்தான் தூண்களாய்!
தாங்கிநிற்கின்றன இந்த உலகை!!
கோகுலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.