வெறுமன் - சு.மு.அகமது

Photo by Tim Mossholder on Unsplash

பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன்
நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில்
அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான்

அதீத ஞானம்பெற்றவன் போல்
போதியின் நிழலில் நின்று
எதேதோ பிதற்றுகிறான்

இலையுதிர்த்த விருட்சத்தின்
கடைசி இலையை கையிலெடுப்பவன்
இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான்

போலப் பொழிதலும்
ஆகச் சிறப்பதுமாய்
பயணத் தொடர்கையில்
மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான்

கவலையால் நிரம்பியவனின் ஓலம்
கவிதையாயின் அவன் கவிஞன்
பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன்
தத்துவமெனில் ஞானியாகிறான்

ஏதுமற்று போனால்...
வெற்றுவெளியில் உலவும்
’வெறுமனா’ய் போவான் அவன்!?
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.