உறவின் சூட்சுமம் - சு.மு.அகமது

Photo by Jr Korpa on Unsplash

 
தூர தேசத்துப் பறவையின் வருகையால்
குதூகலிக்கும் மனது
பொழுதுகளில்
தொட்டியில் வளர்க்கும் மரமாய்
முடக்கிப் போடுகிறது உணர்வை

விரிசலுற்ற மண்குடமாய்
விரயமாகும் சிலதில்
கசிகிறது இயலாமை

கடக்கும் போது இல்லாதது
கடந்த பின்பு துளைக்கும்
ஈயத்துண்டின் கழிவாய்

தங்கிப்போகும் வாசம்
மறக்கும் முன்பேயே
எங்கோ புள்ளியாய் மறைந்துப்போகும்
மிச்சத்திலெழும் ஆவி

புரட்டிப்போடும் நினைவுகளில்
பதிந்து முளைக்கிறது இளங்குருத்தாய்
ஓர் ஈர்ப்பு
சூட்சுமதாரியின் முடிச்சவிழும் போது
புதிதாய் உதிக்கிறது
உறவின் மீதான உறவு
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.