இரங்கலுக்கு வருந்துகிறோம் - சு.மு.அகமது

Photo by Tommy Kwak on Unsplash

சுவர் எழுதிக்கொள்ளும்
எனது இரங்கற்பாவை

அதற்குத்தான் தெரியும்
சித்திரத்தின் வலி

தீண்டல்களின் தோலுறியும்
சுவரதை நன்கறியும்

பூக்களின் சருமத்தில்
புகைச்சலின் பரிசம்
பூவோடு சருகும் கருகும்
மட்கிப்போயிருக்கும்
என் எச்சத்தின் மிச்சம்

நெட்டி முறித்திடும் சோம்பல்
நெடு நாளைய கனவாய்

ஒருக்களிக்கும் நினைவுகளில்
என் மரணம்
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.