உணர்வலைகள் - சத்தி சக்திதாசன்

Photo by Julian Wirth on Unsplash

மனமெனும் !
கடற்கரையில் !
ஓயாமல் அடித்தது !
ஓங்காரமான !
உணர்வலைகள் !
கன்னி அவளைக் !
கண்டதும் !
கண்களில் எழுந்து !
அடித்ததொரு !
காதல் அலையே ! !
அழகாக கண்ணாடிக் !
கூட்டினில் !
அடுக்கிய !
தின்பண்டங்களைக் !
கண்டதும் !
அடித்ததங்கே !
பசியலையே ! !
ஆலய வாசலினிலே !
கால்கள் !
பதிந்தவுடன் !
மனமென்னும் இருள் !
வீட்டில் !
ஒளியேற்றி !
அடித்ததொரு !
அருளலையே ! !
அன்னை , தந்தை !
ஞாபகங்கள் !
நெஞ்சினிலே !
நிறைந்திடுகையில் !
துயர் பொங்க !
கண்களிலே அணை !
கட்டும் நீரதனால் !
உயர்ந்ததொரு !
அன்பலையே ! !
ஆசிரியர் பள்ளியிலே !
அழகாக !
உன்னத எதிர்காலத்திற்கு !
உதவியாய் !
புகட்டிய புனித அலை !
அறிவலையே ! !
இத்தனை அலைகளையும் !
தாங்கிய இதயமெனும் !
கடற்கரையோ !
இன்றுவரை !
பலருக்கும் புரியாத !
ஓர் புதிரலையே ! !
-சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.