ஓலைக்குடில் - ப. கரிகாலன்

Photo by Seyi Ariyo on Unsplash

கடல் உப்புக்காற்று சில்லென மேனி தடவ !
உச்சி வெய்யில் உசிரை உலுப்ப!
துடுப்பின் வலிப்பில் !
நீரினோசை நிசப்தத்தை !
நிர்மூலமாக்க!
கடல் நாரைகளின் நாட்டம் !
படகின் மீன்களை நாட!
கரையைத் தேடி!
ஓய்வின்றி வலிக்கின்றான்….!
நிலையற்ற இவ்வாழ்வில்!
நிம்மதி தேடும் ஈழத்து மீனவன்!
ஓலைக்குடிலில் ஒரு கஞ்சி சோற்றுக்கு!
நாய் படாப்பாடு என எண்ணத் !
தோன்றாதவனாய்!
கடலன்னையின் அரவணைப்பில்!
பழகிப்போன அவன் வாழ்வில் நித்தமும்!
ஒரு நம்பிக்கை பெருமூச்சு.....!
ஈழப்போரிலும்!
ஆழிப்பேரலையிலும் !
உருக்குலைந்த வாழ்க்கையை!
செப்பனிட நாதியற்றவனாய்...!
ஏலேலோ ஐலசா காற்றினில் மிதந்துவர!
அவன் மீண்டும் புத்துயிர் பெற்றவனாய்!
கரையைத்தேடி படகை வலிக்கின்றான்…
ப. கரிகாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.