மனிதனைத் தேடி - சத்தி சக்திதாசன்

Photo by Paweł Czerwiński on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
களைத்து விட்டேன் ஏனொ இது !
முடிவிலாத பயணமன்றோ ! !
பாதை நீண்டு !
கொண்டேயிருக்கிறது !
பயணம் தொடர்ந்து !
கொண்டேயிருக்கிறது !
தேடும் அவனைக் !
காணவவேயில்லை ! !
அன்பைக்கொடு உடனே !
அவனைக் கண்டுபிடித்து விடலாம் !
என்றவன் ஒருவன் !
கொடுத்த அன்பையும் !
தொலைத்து விட்டு !
ஏழையாய் இன்று நான் !
ஆனாலும் !
அவனைக் காணவில்லை !
பணத்தை அள்ளியெறி !
காலடியில் விழுந்திருப்பான் !
அறிவாளி ஒருவன் !
அறிவுரை சொல்லிட்டான் !
இருந்ததை இழந்தோர் !
செல்வந்தனானேன் !
இன்னமும் அவனெனக்கு !
அகப்படவில்லை !
வெளிச்சத்தில் பார்த்தால் !
வெளியே வந்திடுவான் !
இருட்டினில் இருந்தவன் !
இனாமாய் வழங்கிய புத்திமதி. !
பகல் போல வெளிச்சத்தை !
பாய்ச்சியும் கூட !
கண்களின் ஓரத்தில் !
காணவேயில்லை அவனை !
களைத்து விட்டேன் !
கடைசிப் படியை எட்டியும் விட்டேன் !
தென்படவே மாட்டான் எனத் !
தெளிந்து நானும் !
உலகில் அவன் இல்லவேயில்லை என !
உணர்ந்து கொண்டே தூங்கும் போது !
தோளில் ஒரு கை !
தோழமையாய்த் !
தொட்டது !
தேடும் போது என்னைக் !
காணமாட்டாய் என்னை !
ஏனெனில் !
நீ தேடியது !
எந்தன் நிழலையே !
சிரித்தபடியே என்னருகே !
மனிதன் நின்றான்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.