மனதின் கையில் - சித. அருணாசலம்

Photo by engin akyurt on Unsplash

மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
காற்று விடுவதாயில்லை.!
மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
மேகம் விடுவதாயில்லை.!
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது - ஆனால்!
ஆசை விடுவதாக இல்லை.!
காதல் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
காமம் விடுவதாயில்லை.!
மேகத்தையும், காற்றையும் !
வேகத்தைக் கட்டுப்படுத்தச் சொல்ல முடியுமா?!
ஆசையையும், காமத்தையும்!
அளவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?!
நிறைவாக ஒன்று இருக்கும் போது - அதில்!
குறை சேர்வதற்கு மற்றது அவசியமா?!
இவற்றையெல்லாம் இணைத்திருப்பது!
இறைவன் படைப்போ - இல்லை!
இயற்கையின் நியதியோ?!
கட்டுப்பாடு என்பது!
மனிதனின் கையில் - அதுவும்!
மனதின் கையில் மட்டும்
சித. அருணாசலம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.