ஏனிந்த மாற்றம் - சித. அருணாசலம்

Photo by joel protasio on Unsplash

இருளைத் தூங்க வைத்து!
பொழுதைத் துவங்கும் கதிரவன்.!
புல்லின் மேல் பனித்துளி!
கிரீடமாய் இருக்க!
புள்ளினங்கள் விழித்துப் !
புத்துணர்வுப் பயணம் துவக்க!
மெத்தையான வைக்கோலில் !
மேனிகிடத்திய கால்நடை எழ!
இவையெல்லாம் மாற்றமின்றி!
எப்போதும் போல் தான். !
ஊரைக் கைக்குள் போட!
யாரைக் கவிழ்க்கலாம்.!
பிழைக்கும் வழிதேடப்!
பொய்கள் என்ன கூறலாம்.!
உள்ளம் வெறுக்க !
உதட்டில் சிரிப்பை!
எப்படிக் காட்டலாம் - என்று!
மனிதனின் சிந்தனைகள் மட்டும்!
மாற்றம் கண்டு!
மக்கிப் போனது எதனால்?
சித. அருணாசலம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.