விரல்நுனியில் மை வைத்து விதியை - வித்யாசாகர்

Photo by engin akyurt on Unsplash

எழுதுங்கள் !!!
------------------------------------------------------------!
சில்லறைக்கு!
விலைபோகும்!
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்!
நாளைய விதியை இன்றெழுதும்!
தேர்தல் பிரம்மாக்கள்;!
இலவசத்தில் மதிமயங்கி!
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்!
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்!
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்!
மண்ணின் – உரிமை குடிகள்;!
போட்டதை தின்று!
விரித்ததில் தூங்கிப் போகும்!
புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல – நாம்!
சரி தவறு அலசி; தக்கவரை நிறுத்தி – நாட்டின்!
வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தக்க அறிவுள்ள மனிதர்கள்;!
விரல்நுனியில் மை பூசி – இருக்கை பெற்றபின்!
தலைக்கு நெருப்பிடும் கைகளை!
முறித்துப் போடும் வாய்ப்புதனை அன்றிலிருந்தே!
மீண்டும் மீண்டும் பெற்றவர்கள் – நாம்!
மீண்டும் மீண்டும் இழக்கிறோமே தவறில்லையா??????!
அடித்தவனை!
திருப்பியடிக்கத்!
தயங்காத நம் கைகள் -!
வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்!
விட்டுவைத்ததில் சோடைபோனோமே; அதும் தமிழராய்???!!!!
வரும் தலைமுறைக்கு!
வாழ்வினை சேகரிக்கும் கடமையினை!
ஒவ்வொருமுறை – கவனமின்றி பதிந்த ஒட்டுக்களுக்கும்!
கொடுத்த விலை படி விற்றுவிட்டோமென்பது!
சிந்திக்காத கேவலத்தால் -!
நாம் செய்த பெருங் குற்றமின்றி வேறென்ன???!
ஐந்து வருடத்திற்கு!
பணம் காய்க்கும் மரமென்றெண்ணி!
ஒரு குவளை சாராயம் ஊற்றிக் கொடுத்து!
வெட்டிச் செல்பவர்களை – இனி!
விரட்டித் துரத்துவோம்;!
ஓட்டு போடுவதற்கென!
அரிசி – யல்ல!
அமிழ்தமே தந்தாலும்!
தூக்கி முகத்தில் வீசுவோம்;!
மக்களின்!
சுய புரட்சியின் அர்த்தத்தை!
தேர்தலால் அனைவருக்கும்!
விளங்கவைப்போம்;!
உனக்கும்!
எனக்கும்!
இத் தேசத்தின் நன்மைக்கும்!
இனத்தின் மக்களின் ஒவ்வொரு குடிமகனின்!
உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்!
சிந்திப்பவர்!
உழைக்க முடிந்தவர் எவரேனும் உண்டெனில்!
அவருக்கென விரல் நுனியில் மையிடுவோம்;!
நம் வாழ்வினை நாமே திருத்தியமைப்போம்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.