வேண்டுவதும், வேண்டாமையும் - சித. அருணாசலம்

Photo by Jr Korpa on Unsplash

கருப்பைக் குறைவாக நினைப்பதும்,!
பிறப்பைக் கேவலமாய்ப் பார்ப்பதும்,!
தேறாத மனங்களில் நஞ்சாகிப் போன!
ஆறாவது அறிவின் அடையாளம்.!
உடுத்துவது கருப்பில் வேண்டும்,!
உச்சிமுடி கருப்பில் வேண்டும்,!
வணங்கிடும் இறைவன் கருப்பில் - உடன்!
வாழ்ந்திடுவோர் கருப்பில் வேண்டாமோ?!
உழுபவனின் விளைச்சல் வேண்டும்.!
பழுது பார்க்கப் பாட்டாளி வேண்டும்!
பக்கத்தில் வந்து நிற்க மட்டும்!
பாழாய்ப் போன சாதியால் வேண்டாமோ?!
-சித. அருணாசலம்.!
சிங்கப்பூர்.!
சித. அருணாசலம்!
சிங்கப்பூர்
சித. அருணாசலம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.