வாடிக்கையாய் நடக்கிறது வீட்டில்...!
வரன் ஒன்று வந்திருக்கிறது...!
விவரம் சொல்கிறேன் கேள்...!
விஞ்ஞானி, பொறியாளர், !
வழக்கறிஞர், மருத்துவர்...!
வடநாடு அல்லது அயல்நாடு...!
நல்ல குணம், குடும்பம், படிப்பு...!
என்ன சொல்கிறாய்...?!
நேரம் கொடுங்கள்...!
யோசிக்கிறேன்...!
பின் மெளனம்... !
மெளனம்...!
மெளனம்...!
சம்மதத்திற்கு அறிகுறி அல்ல...!
பிடிக்கவில்லை என்பதற்கு...!
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்...!
இப்படியாய்...!
எப்போது சம்மதிப்பேன்...!
என காத்துக் கொண்டிருக்கிறார்கள்...!
என்றும் இல்லை...!
என்பது என் மனதிற்குத் தெரியும்...!
ஏன்....?!
என்று உங்களுக்கு...!
புரியுமே...!

அனாமிகா பிரித்திமா