பாசத்திற்குரிய அப்பாவுக்கு - அனாமிகா பிரித்திமா

Photo by engin akyurt on Unsplash

“பெண் குழந்தை”...!
என்றதும்...!
பெருமுச்சு விடாமல் !!
பார்த்த, அடுத்த நொடியில்...!
இந்த வைரச்சிலைக்கு...!
கண் பட்டு விட கூடாதேன்று...!
கருப்பு வளையல் பூட்டியவர் !!
கால்கள் தரையில் பட்டு...!
சிவக்க கூடாதேன்று...!
தன் மார்பை எனக்காய்...!
தரையாக்கியவர் !!
விளையாடி களை(உடை)க்க...!
அவர் வாங்கி ...!
கொடுக்காத பொருட்களே... !
இல்லை !!
அழகாய் அறிவுரை...!
போதிப்பார் !!
பொறியாளராய்...!
பாடம் நடத்துவார் !!
என் பட்டங்கள்...!
அவர் எனக்களித்த...!
விலைமதிப்பில்லா...!
பரிசுகளே !!
அரசிகளுக்கு சோதித்து...!
கொடுப்பதை போல ...!
என் உணவை...!
ஏன் மருந்தை கூட...!
சோதிக்காமல்...!
கொடுத்ததில்லை !!
என்னை ...!
தங்க சிலையாய்...!
அலங்கரித்து...!
அழகு பார்த்ததும்...!
அவரே !!
நான் சிரித்து கொண்டே...!
இருக்க வேண்டும்...!
என தன் ஆசைகளை...!
மாற்றிக்கொண்டவர் !!
என் மனதின் ஆசைகளை... !
நிறைவேற்ற உலகை...!
விலை பேச கூட...!
தயங்காதவர் !!
“என்னடா வேணும்...?”!
என எனக்கான சகலமும்...!
இன்று வரை...!
பார்ப்பதும் அவரே !!
என்ன சொல்லி அழைப்பது...!
இந்த மகானை...!
“அப்பா”..!
“தந்தை”...!
“தகப்பனார்”...!
“தாயுமானவர்”..!
“தியாகி”...!
இவை எல்லாவற்றையும்...!
சேர்த்து ஒரு வார்த்தை ...!
கிடைக்குமானால் !!
அதுவே...!
பொருந்தும் ...!
என் பாசத்திற்குரிய...!
“அப்பாவுக்கு” !!
!
-அனாமிகா பிரித்திமா
அனாமிகா பிரித்திமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.