விதி வசத்தால் - அனாமிகா பிரித்திமா

Photo by engin akyurt on Unsplash

உங்களை கைப்பிடிக்கும் வரை...!
தமிழ் தெரியாது...!
முழுமையாய்...!
பிடித்தபின் உங்களை...!
ரசித்ததாலேயே...!
தமிழைக் கற்றுக்கொண்டேன்...!
முழுதாய் கற்று...!
முடிக்கும் முன்னே...!
விதி வேறு விதமாக...!
இருவரையும் இழுத்துச்சென்றது...!
கவிதை எழுதுவேன் என்று...!
கனவிலும் நினைக்கவில்லை...!
கற்று கொடுத்த ஆசான் நீங்கள்...!
கண்ணீருடன் என் நன்றிகள்...!
பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்...!
நான் கவிதைக்காரி அல்ல...!
ஆனால் இன்று விதி வசத்தால்...!
எழுதுகிறேன்...!
எழுதுவேன்...!
!
-அனாமிகா பிரித்திமா!
()
அனாமிகா பிரித்திமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.