கேட்டதும் கிடைத்ததும் - வையவன்

கேட்டதும் கிடைத்ததும் - Tamil Poem (தமிழ் கவிதை) by வையவன்

Photo by Jr Korpa on Unsplash

நீ கவிதையைக் கேட்டாய்
நான் காதலைக் கேட்டேன்
நீ உள்ளத்தைக் கேட்டாய்
நான் உதடுகளைக் கேட்டேன்
நீ பகல்களைக் கேட்டாய்
நான் இரவுகளைக் கேட்டேன்
நீ உணர்வுகளைக் கேட்டாய்
நான் உறுப்புகளைக் கேட்டேன்
நீ வாழ்க்கையைக் கேட்டாய்
நான் படுக்கையைக் கேட்டேன்
உதவாக்கரை என்றாய்
உதவிக் கொண்டோம் ஒருவருக்கொருவர்
பகிர்ந்து கொண்டோம் பாதிப் பாதி
மீதியிருப்பது நீயும் நானும்
கேட்க மறந்து பேதமிழந்து

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.