சிந்திக்க மறந்த காரணத்தால்,!
சிந்திக்காது விட்டு,!
நொந்து நு£லாகி!
வெந்து வேலாகி!
கந்தலாகி!
கடமை மறந்து,!
உம் வாழ்வை!
துன்பத்திடம் கடன் தந்து!
துயரத்தில் மூழ்கிய!
சோதரனே ! சோதா¤யே !!
எண்ணிப் பாருங்கள்!
வள்ளுவன் சொல்லை!
எண்ணித் துணிக கருமம்...!
என்னும் எழுச்சி மிகு!
கருத்தை மனதிற்கொண்டு!
எண்ணித் துணிந்திடுவீர்!
இனியேனும்!
சிந்தித்து நடந்திடுவீர்

புஸ்பா கிறிஸ்ரி